Sep 13, 2026
Thisaigal NewsYouTube
குழந்தை கடத்தல் சந்தேகம்: விண்டெட் செயலி மீது பிரான்ஸ் அரசு தீவிர விசாரணை
உலகச் செய்திகள்

குழந்தை கடத்தல் சந்தேகம்: விண்டெட் செயலி மீது பிரான்ஸ் அரசு தீவிர விசாரணை

Share:

பயன்படுத்திய ஆடைகள் மற்றும் பொருட்களை மறுவிற்பனை செய்யும் விண்டெட் என்ற செயலியில், பொம்மைகள் போன்ற குறைந்த மதிப்புள்ள சில பொருட்கள் மிக அதிக விலைக்கு பட்டியலிடப்பட்டிருப்பதுடன், குழந்தைகளின் வயது மற்றும் உடல் அளவுகள் போன்ற விபரங்களும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தன. இது குழந்தை கடத்தல் தொடர்பான குறியீட்டு முறையாக இருக்கலாம் என்று டிக் டாக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பயனர்கள் பலரும் சந்தேகம் எழுப்பி, கடுமையான அதிர்ச்சியை வெளிப்படுத்தினர்.

இதனைத் தொடர்ந்து பிரான்சின் நந்தேர் நகரில் உள்ள அரசு வழக்கறிஞர் அலுவலகம் இது குறித்து முதற்கட்ட விசாரணையைத் தொடங்கியுள்ளது. மேலும், பிரான்சின் குழந்தைப் பருவத்திற்கான உயர் ஆணையர் சாரா எல் ஹைரியும் இத்தகைய சந்தேகத்திற்குரிய கணக்குகள் குறித்து புகார் அளித்துள்ளார்.

இருப்பினும், இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள விண்டெட் நிறுவனம், தங்களின் முதற்கட்ட ஆய்வில் இதற்கான எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை என்றும், அந்த அதிகப்படியான விலை மற்றும் விபரங்கள் சேகரிப்பாளர்களின் மதிப்பு அல்லது பேச்சுவார்த்தை உத்திகளாக இருக்கலாம் என்றும் விளக்கம் அளித்துள்ளது. மேலும், இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை அதிகாரிகளுடன் முழுமையாக ஒத்துழைத்து வருவதாகவும் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Related News