தமிழகம், மே.05-
தமிழகத்தில் ஆட்சி அமைக்க 118 இடங்கள் தேவை என்ற நிலையில், விஜய்யின் த.வெ.க-விற்கு இன்னும் 10 இடங்களே குறைவாக உள்ளன. இந்தச் சூழலில், 5 இடங்களில் வெற்றி பெற்றுள்ள காங்கிரஸ் மற்றும் பிற சிறு கட்சிகளின் ஆதரவைப் பெற விஜய் தீவிர முயற்சியில் இறங்கியுள்ளார்.
திமுக கூட்டணியில் இருந்து வெளியேறி, த.வெ.க அரசுக்கு ஆதரவளிக்க காங்கிரஸ் முன்வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அமைச்சரவையில் இடமா அல்லது வெளி ஆதரவா என்பது குறித்த ரகசிய பேச்சுவார்த்தைகள் தீவிரமடைந்துள்ளன.
108 இடங்களில் வெற்றி பெற்றதற்கான சான்றிதழுடன், தமிழகத்தில் ஆட்சி அமைக்கத் தன்னை அழைக்குமாறு தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேக்கருக்கு விஜய் இன்று கடிதம் அனுப்பியுள்ளார்.
தமிழகத்தின் அடுத்த முதலமைச்சராக விஜய் அரியணை ஏறுவது உறுதியாகியுள்ள நிலையில், பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் த.வெ.க தொண்டர்கள் வெற்றிக் கொண்டாட்டங்களில் மூழ்கியுள்ளனர்.








