Sep 13, 2026
Thisaigal NewsYouTube
பௌத்த துறவிகளின் ஊர்வலத்தில் லாரி புகுந்து விபத்து: எட்டு துறவிகள் பரிதாபமாக உயிரிழப்பு; சிறுவன் கைது!
உலகச் செய்திகள்

பௌத்த துறவிகளின் ஊர்வலத்தில் லாரி புகுந்து விபத்து: எட்டு துறவிகள் பரிதாபமாக உயிரிழப்பு; சிறுவன் கைது!

Share:

பௌத்த துறவிகளின் ஊர்வலத்தின் மீது சிறுவன் ஒருவன் தனது பெற்றோரின் லாரியை ஓட்டிச் சென்று மோதியதில் குறைந்தது எட்டு பௌத்த துறவிகள் உயிரிழந்தனர் மற்றும் 10 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். யாத்திரையின் போது 35 துறவிகள் மற்றும் ஐந்து சீடர்கள் கொண்ட குழுவினர் சாலையோரமாக நடந்து சென்று கொண்டிருந்தபோது இந்த விபத்து நேரிட்டுள்ளது. லாரியை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய சந்தேக நபர் ஒரு சிறுவன் என்று உள்ளூர் காவல்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.

Related News