தமிழகம், மே.05-
கடந்த ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெற்று முடிந்த தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையானது, நேற்று காலை முதல் இரவு வரை நீடித்து அதிகாரப்பூர்வத் தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
முடிவுகளில் எந்த ஒரு கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காததால், மாநிலத்தில் தொங்கு சட்டமன்றம் உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.
நேற்றைய தேர்தல் முடிவுகளின்படி,108 தொகுதிகளில் வென்று, நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை வகிக்கிறது.
இருப்பினும், ஆட்சி அமைக்க 118 தொகுதிகள் தேவை என்ற சூழலில், அக்கட்சிக்கு 10 தொகுதிகள் குறைவாக உள்ளன.
இந்நிலையில், தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள தவெகக்கு ஆட்சி அமைக்க ஆளுநர் முதலில் அழைப்பு விடுப்பார் என அரசியல் நிபுணர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
ஆனால், 59 தொகுதிகளை வென்றுள்ள திமுக- உடனோ, 47 தொகுதிகளை வென்றுள்ள அதிமுகவுடனோ அல்லது இதர கட்சிகளுடனோ கூட்டணி அமைக்க இயலாத சூழலில் 10 தொகுதிகளை நிரப்ப தவெக என்ன செய்யப் போகிறது என்ற கேள்விகள் எழுந்துள்ளன.
தவெகவுக்கு பெரும்பான்மை இல்லாத நிலையில், ஆதரவு பெறாமல் ஆட்சி அமைப்பது சாத்தியமில்லை என்பதால், அடுத்த சில மணி நேரங்களில் முக்கிய அரசியல் முடிவுகள் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.








