குஜராத்தி பின்னணியைக் கொண்ட சித்தி இட்னானி, தற்போது ஒரு பக்காவான 'தமிழ் பெண்ணாக' மாறியிருப்பது ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது. அவரது எளிமையான பேச்சும், கதைகளைத் தேர்வு செய்யும் விதமும் அவரை அடுத்த கட்டத்திற்கு அழைத்துச் செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.
"நான் காலை 6 மணிக்கு எழுந்து படப்பிடிப்புத் தளத்திற்குச் செல்வதை மிகவும் நேசிக்கிறேன்" எனக் கூறும் அவர், தற்போது தனது சருமப் பராமரிப்பு மற்றும் உடற்பயிற்சிகளிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறார். சித்தியின் நடிப்பில் அடுத்தடுத்து வெளியாகவுள்ள படங்கள் அவருக்குத் தமிழ் சினிமாவில் ஒரு நிரந்தர இடத்தைப் பிடித்துத் தரும் என்பதில் சந்தேகமில்லை.








