Jun 27, 2026
Thisaigal NewsYouTube
ஜெடாவில் மலேசிய நடிகை நடியா கெசுமா மாயம் - தேடும் பணிகள் தீவிரம்
சினிமா

ஜெடாவில் மலேசிய நடிகை நடியா கெசுமா மாயம் - தேடும் பணிகள் தீவிரம்

Share:

சிப்பாங், ஜனவரி.17-

மலேசிய நடிகை நடியா கெசுமா, ஜெடாவிலுள்ள கிங் அப்துல் அஸிஸ் அனைத்துலக விமான நிலையத்தில் தரையிறங்கிய பிறகு, காணாமல் போனதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

உம்ரா மற்றும் பல சர்வதேச சுற்றுலாத் தளங்களை உள்ளடக்கிய பயணம் ஒன்றில் இணைந்திருந்த நடியா, கடந்த ஜனவரி 15-ஆம் தேதி, கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டுள்ளார்.

இந்நிலையில், ஜெடாவில் தான் பாதுகாப்பாகத் தரையிறங்கி விட்டதாக தனது கணவருக்குத் தகவல் தெரிவித்த நடியா கெசுமா, அதன் பின்னர் தொடர்புக்கு வரவில்லை என்றும் அவரது குடும்பத்தினர் குறிப்பிட்டுள்ளனர்.

அதே வேளையில், அவர் சென்ற சுற்றுலா நிறுவனமும், லண்டன் செல்லும் விமானத்தில் நடியா கெசுமா தங்களுடன் இணையவில்லை என்று அவரது குடும்பத்தினருக்குத் தகவல் தெரிவித்துள்ளது.

இதனிடையே, ஜெடா விமான நிலையத்தில் தான் ஒரு புதிய நபரைச் சந்தித்தாக நடியா கெசுமா தனது கணவருக்குத் தகவல் தெரிவித்ததாகவும், அதுவே அவரது கடைசித் தகவல் என்றும் கூறப்படுகின்றது.

தற்போது, நடியா கெசுமாவைத் தேடும் பணியில் ஜெடா அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

Related News

மருத்துவமனை சூழலில் இருந்து ஒரு தற்காலிக விடுதலை; மான்செஸ்டர் மருத்துவமனையில் நோயாளிகளுக்காக பிரத்யேகத் திரையரங்கம் திறப்பு

மருத்துவமனை சூழலில் இருந்து ஒரு தற்காலிக விடுதலை; மான்செஸ்டர் மருத்துவமனையில் நோயாளிகளுக்காக பிரத்யேகத் திரையரங்கம் திறப்பு

பிரபல இயக்குநரும், நடிகருமான பாக்கியராஜ் மாரடைப்பால் காலமானார்

பிரபல இயக்குநரும், நடிகருமான பாக்கியராஜ் மாரடைப்பால் காலமானார்

பிராட்போர்டு திரையரங்குகள்: இந்த வார இறுதியில் வெளியாகும் சூப்பர்கர்ல், டாய் ஸ்டோரி 5 திரைப்படங்கள்!

பிராட்போர்டு திரையரங்குகள்: இந்த வார இறுதியில் வெளியாகும் சூப்பர்கர்ல், டாய் ஸ்டோரி 5 திரைப்படங்கள்!

கோலிவுட்டை மாற்றியமைக்கும் ஓடிடி; தமிழ் சினிமாவின் எதிர்காலம் குறித்த விவாதங்கள் தீவிரம்!

கோலிவுட்டை மாற்றியமைக்கும் ஓடிடி; தமிழ் சினிமாவின் எதிர்காலம் குறித்த விவாதங்கள் தீவிரம்!

இந்தியச் சினிமாவால் உலகளாவிய நிலையை எட்ட முடியாது என்றார்கள்: பிரியங்கா சோப்ரா

இந்தியச் சினிமாவால் உலகளாவிய நிலையை எட்ட முடியாது என்றார்கள்: பிரியங்கா சோப்ரா

ரஜினி - கமல் 50 ஆண்டுகால நட்பின் பின்னணியில் உள்ள உருக்கமான சோகக் கதை!

ரஜினி - கமல் 50 ஆண்டுகால நட்பின் பின்னணியில் உள்ள உருக்கமான சோகக் கதை!