கோலாலம்பூர், ஜூன்.05-
மலேசிய இருதய சிகிச்சைக் கழகமான ஐஜேஎன் கொண்டுள்ள சேவைத் தரத்தை மேன்மை தங்கிய புருணை சுல்தான், சுல்தான் ஹாஸானால் போல்கியா வெகுவாகப் பாராட்டியுள்ளார்.
அண்மையில் ஐஜேஎன்னில் மருத்துவ சிகிச்சையைப் பெற்றுக் கொண்ட புருணை சுல்தான், மிகச் சிறந்த நிபுணத்துவ மருத்துவர்களை ஐஜேஎன் கொண்டுள்ளது என்று பெருமிதம் தெரிவித்துள்ளதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
கோலாலம்பூரில் நடைபெற்ற ஆசியான் மாநாட்டில் கலந்து கொண்ட புருணை சுல்தான், உடல் அசதி காரணமாக ஐஜேஎன்னில் அனுமதிக்கப்பட்ட நிலையில், உடல் நலம் தேறி, தாயகம் புறப்படுவதற்கு முன்னதாக ஐஜேஎன்னின் சேவைத் தரம் குறித்து தம்முடன் பகிர்ந்து கொண்டதாக டத்தோஸ்ரீ அன்வார் குறிப்பிட்டார்.








