சிலாங்கூர் மாநிலத்தில் கடந்த ஜனவரி மாதத்திலிருந்து வீடு புகுந்து கொள்ளையிட்டு வந்த சம்பவங்கள் தொடர்பில் 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஹுசேன் ஒமார் கான் தெரிவித்துள்ளார். பாராங்கை ஆயுதமாக ஏந்திய நிலையில் முகமூடி அணிந்து கொண்டு இக்கொள்ளைச் சம்பவங்கள் நிகழ்ந்து இருப்பதாக இன்று ஷா ஆலாமில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் ஹுசேன் ஒமார் இதனை குறிப்பிட்டார். ஆகக்கடைசியாக கடந்த ஏப்ரல் 30 ஆம் தேதி நிகழ்ந்த கொள்ளைச் சம்பவம் தொடர்பில் மூன்று நபர்கள், வீடு புகுந்து கொள்ளையிட்டதுடன் வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த காரை களவாடிச் சென்றுள்ளதாக ஹுசேன் ஒமார் தெரிவித்தார். சிலாங்கூர், மலாக்கா மற்றும் ஜோகூரில் நடத்தப்பட்ட சோதனையில் இந்த 13 பேர் பிடிபட்டதாக அவர் மேலும் விவரித்தார்.

Related News

இன்னும் வேறு என்ன செய்யச் சொல்கிறீர்கள்? பிரதமர் அன்வார் கேள்வி

தமிழ்ப்பள்ளிகளில் திருவள்ளுவர் சிலையை அகற்ற உத்தரவிடப்பட்டதா? ஜோகூர் கல்வி இலாகா மறுப்பு

கம்போங் ஜாவா வீடுகள் உடைக்கப்பட்ட நடவடிக்கை சுமூகமாக நடைபெற்றது

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொது அடிப்படை கட்டமைப்பு வசதிகளை சீர்படுத்த 500 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு: பிரதமர் அறிவிப்பு

கரைபுரண்டோடிய வெள்ளத்தில் நீந்தி வந்த மாணவன் பாதுகாப்பாக உள்ளான்


