கருக்கலைப்பு செய்ததை மறைக்க முயன்றது மற்றும் சிசுவின் பிறப்பை மறைத்தது ஆகிய குற்றச்சாட்டுகளை, வயது குறைந்த ஓர் ஆணும், பெண்ணும் மலாக்கா, ஆயர் கெரோ மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டனர்.
18 வயதுடைய ஆடம் ஹரித் அகமட் மற்றும் அவரது 17 வயது காதலி, கருக்கலைப்பு மாத்திரைகளைப் பயன்படுத்திச் சிதைந்த கருவை ஒரு காரின் பின்பக்கப் பெட்டியில் மறைத்து வைத்துள்ளனர்.
இந்தச் சம்பவம் மலாக்காவில் பத்து பெரண்டாம் மற்றும் மெர்லிமாவ் பகுதிகளில் நிகழ்ந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.








