பினாங்கு ஜாலான் கெடாவில் உள்ள கடைவரிசைக்கு அருகிலுள்ள சாக்கடை ஒன்றில் 37 வயதுடைய உள்ளூர் ஆடவர் ஒருவர் இன்று காலையில் இறந்த நிலையில் மீட்கப்பட்டார்.
காலை 9.26 மணியளவில் பொதுமக்களால் இந்தச் சம்பவம் கண்டறியப்பட்டு, தீமோர் லாவுட் மாவட்ட போலீஸ் துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
விசாரணையில், அந்த நபர் வீடற்றவர் என்றும், அவர் சிலாங்கூர், காப்பாரைச் சேர்ந்தவர் என்றும் தெரியவந்துள்ளது.
பினாங்கு போலீஸ் தலைமையக தடயவியல் குழுவினர் சடலத்தைச் சோதித்ததில், எவ்விதக் குற்றவியல் கூறுகளும் கண்டறியப்படவில்லை என்று தீமோர் லாவுட் மாவட்ட போலீஸ் தலைவர் லீ சுவி சேக் தெரிவித்தார்.
மரணத்திற்கான காரணத்தைக் கண்டறிய, சடலம் பினாங்கு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.








