May 21, 2026
Thisaigal NewsYouTube
மாமன்னரை  அவமதிக்கும் வகையில் 'AI' தொழில்நுட்பத்தில் போலி டிக் டாக் கணக்கு: புக்கிட் அமான் விசாரணை
தற்போதைய செய்திகள்

மாமன்னரை அவமதிக்கும் வகையில் 'AI' தொழில்நுட்பத்தில் போலி டிக் டாக் கணக்கு: புக்கிட் அமான் விசாரணை

Share:

மாமன்னர் சுல்தான் இப்ராஹிமை அவமதித்து, அவதூறு பரப்பும் வகையில், செயற்கை நுண்ணறிவான AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட போலி டிக் டாக் கணக்கு குறித்து புக்கிட் அமான் போலீஸ் தலைமையகம் தீவிர விசாரணையைத் தொடங்கியுள்ளது.

“சுல்தான் இப்ராஹிம் இஸ்மாயில்" என்ற பெயரில் இயங்கி வந்த அந்தப் போலி கணக்கை ஜோகூர் அரச ஊடக அலுவலகம் கண்டறிந்து புகார் அளித்தது. இதனைத் தொடர்ந்து, இச்சம்பவம் குறித்து சிறப்பு விசாரணைப் பிரிவு விசாரணையை முடுக்கிவிட்டுள்ளதாக புக்கிட் அமான் குற்றவியல் புலனாய்வுத் துறை CID இயக்குநர் டத்தோ எம். குமார் உறுதிப்படுத்தியுள்ளார்.

இக்குற்றம் தொடர்பாக 1948 ஆம் ஆண்டு நிந்தனை சட்டம், குற்றவியல் சட்டம் மற்றும் 1998 தகவல் தொடர்பு மற்றும் பல்லூடகச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

3R என்ற இனம், மதம் மற்றும் அரச குடும்பம் சார்ந்த உணர்வுப்பூர்வமான விஷயங்களைச் சமூக ஊடகங்களில் பதிவிடும்போது பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் போலீஸ் துறை எச்சரித்துள்ளது.

Related News

சிறுவர்களுக்குப் பாலியல் தொல்லை: காப்பகப் பொறுப்பாளருக்கு 11 ஆண்டுகள் சிறை, 5 பிரம்படிகள்

சிறுவர்களுக்குப் பாலியல் தொல்லை: காப்பகப் பொறுப்பாளருக்கு 11 ஆண்டுகள் சிறை, 5 பிரம்படிகள்

ஸ்பெயின் வரை கைவரிசை காட்டிய வேலைவாய்ப்பு மோசடி கும்பல்: சொகுசு பங்களாவில் 35 சீன நாட்டவர்கள்  கைது

ஸ்பெயின் வரை கைவரிசை காட்டிய வேலைவாய்ப்பு மோசடி கும்பல்: சொகுசு பங்களாவில் 35 சீன நாட்டவர்கள் கைது

பொய் ஆவணங்கள் மூலம் 53,000 ரிங்கிட்  மருத்துவக் கோரிக்கை: தம்பதி உட்பட மூவர் எம்.ஏ.சி.சி-யால் கைது

பொய் ஆவணங்கள் மூலம் 53,000 ரிங்கிட் மருத்துவக் கோரிக்கை: தம்பதி உட்பட மூவர் எம்.ஏ.சி.சி-யால் கைது

விரைவுப் பேருந்து தீப்பற்றி எரிந்தது: 17 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்

விரைவுப் பேருந்து தீப்பற்றி எரிந்தது: 17 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்

ஐஸ் லோரியில் 1,000 லிட்டர் டீசல் கடத்தல்: முதியவர் கைது; 38,005 ரிங்கிட்  பொருட்கள் பறிமுதல்

ஐஸ் லோரியில் 1,000 லிட்டர் டீசல் கடத்தல்: முதியவர் கைது; 38,005 ரிங்கிட் பொருட்கள் பறிமுதல்

பேராக் ஆலய நிலப் பிரச்சினைகளில் 40% தீர்வு; தீர்க்கப்படும் வரை ஆலயங்கள் இடிக்கப்படாது: டத்தோ சிவநேசன் உறுதி

பேராக் ஆலய நிலப் பிரச்சினைகளில் 40% தீர்வு; தீர்க்கப்படும் வரை ஆலயங்கள் இடிக்கப்படாது: டத்தோ சிவநேசன் உறுதி