Jun 6, 2026
Thisaigal NewsYouTube
பொய் ஆவணங்கள் மூலம் 53,000 ரிங்கிட்  மருத்துவக் கோரிக்கை: தம்பதி உட்பட மூவர் எம்.ஏ.சி.சி-யால் கைது
தற்போதைய செய்திகள்

பொய் ஆவணங்கள் மூலம் 53,000 ரிங்கிட் மருத்துவக் கோரிக்கை: தம்பதி உட்பட மூவர் எம்.ஏ.சி.சி-யால் கைது

Share:

சிகிச்சை பெறாமலேயே அரசுத் துறை ஒன்றில், சுமார் 53 ஆயிரம் ரிங்கிட் மதிப்பிலான போலி மருத்துவக் கோரிக்கை ஆவணங்களைச் சமர்ப்பித்த குற்றச்சாட்டின் கீழ் தம்பதியர் உட்பட மூவரை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்.பி.ஆர்.எம் கைது செய்துள்ளது.

கடந்த செவ்வாய்க்கிழமை பேரா மாநில எஸ்.பி.ஆர்.எம் அலுவலகத்தில் வாக்குமூலம் அளிக்க வந்தபோது, 50 வயது மதிக்கத்தக்க நிறுவன இயக்குநர் மற்றும் 40 வயது மதிக்கத்தக்க தம்பதியர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் 2024 ஆம் ஆண்டு முதல் 2025ஆம் ஆண்டு வரை உடல்நல மறுவாழ்வு சிகிச்சைக்கான போலி ஆவணங்களைச் சமர்ப்பித்து இந்த மோசடியில் ஈடுபட்டது ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதையடுத்து, ஈப்போ நீதிமன்ற உத்தரவின்படி தம்பதியருக்கு 7 நாட்கள் காவலும், நிறுவன இயக்குநருக்கு 5 நாட்கள் காவலும் விதிக்கப்பட்டுள்ளது இச்சம்பவம் குறித்து 2009ஆம் ஆண்டு எஸ்.பி.ஆர்.எம் சட்டத்தின் கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறது.

Related News

காட்டில் உயிருக்குப் போராடிய 14 நாட்கள்: மீட்கப்பட்ட மலையேற்ற வீராங்கனை உருக்கம்

காட்டில் உயிருக்குப் போராடிய 14 நாட்கள்: மீட்கப்பட்ட மலையேற்ற வீராங்கனை உருக்கம்

நெகிரி செம்பிலான் பாரம்பரியச் சிக்கல்: நீதிமன்றம் செல்லாமல் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க முடியும்

நெகிரி செம்பிலான் பாரம்பரியச் சிக்கல்: நீதிமன்றம் செல்லாமல் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க முடியும்

ஜோகூர் தேர்தல்: எதிர்க்கட்சிகள் மோதலைத் தவிர்த்து ஒன்றிணைய வேண்டும் – மூடா அழைப்பு

ஜோகூர் தேர்தல்: எதிர்க்கட்சிகள் மோதலைத் தவிர்த்து ஒன்றிணைய வேண்டும் – மூடா அழைப்பு

சிரம்பான், தாமான் துவாங்கு ஜாஃபர் ஸ்ரீ மகா ராஜ ராஜேஸ்வரர் தேவஸ்தான மகா கும்பாபிஷேகம்

சிரம்பான், தாமான் துவாங்கு ஜாஃபர் ஸ்ரீ மகா ராஜ ராஜேஸ்வரர் தேவஸ்தான மகா கும்பாபிஷேகம்

தொழில்நுட்பக் கோளாறு: கேஎல்ஐஏ  ரயில் சேவைகள் அனைத்தும் தற்காலிகமாக நிறுத்தம்

தொழில்நுட்பக் கோளாறு: கேஎல்ஐஏ ரயில் சேவைகள் அனைத்தும் தற்காலிகமாக நிறுத்தம்

 14 நாட்களாகக் காட்டில் தவித்த பெண் மலையேறி 'ஜாஸ்லிந்தா' பூர்வக்குடி மக்களால் பத்திரமாக மீட்பு

14 நாட்களாகக் காட்டில் தவித்த பெண் மலையேறி 'ஜாஸ்லிந்தா' பூர்வக்குடி மக்களால் பத்திரமாக மீட்பு