May 21, 2026
Thisaigal NewsYouTube
ஸ்பெயின் வரை கைவரிசை காட்டிய வேலைவாய்ப்பு மோசடி கும்பல்: சொகுசு பங்களாவில் 35 சீன நாட்டவர்கள்  கைது
தற்போதைய செய்திகள்

ஸ்பெயின் வரை கைவரிசை காட்டிய வேலைவாய்ப்பு மோசடி கும்பல்: சொகுசு பங்களாவில் 35 சீன நாட்டவர்கள் கைது

Share:

ஸ்பெயின் போன்ற தூரத்து நாட்டு மக்களைக் குறிவைத்து, டெலிகிராம் செயலி மூலம் அனைத்துலக வேலைவாய்ப்பு மோசடியில் ஈடுபட்டு வந்த கும்பலின் நடமாட்டம் சொகுசு பங்களா ஒன்றில் முறியடிக்கப்பட்டு, 35 சீன நாட்டு ஆடவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இரண்டு வாரக் கண்காணிப்புக்குப் பிறகு, கடந்த மே 14-ஆம் தேதி இரவு 11.50 மணியளவில் போலீஸார் நடத்திய அதிரடி சோதனையில் இந்த ‘அழைப்பு மையம்’ கண்டுபிடிக்கப்பட்டது என்று ஜோகூர், இஸ்கண்டார் புத்ரி மாவட்ட போலீஸ் தலைவர் உதவி கமிஷனர் கே. குமரேசன் தெரிவித்தார்.

கைது செய்யப்பட்ட 21 முதல் 39 வயதுடைய சந்தேக நபர்களில் 33 பேர் மோசடி முகவர்களாகவும், இருவர் சமையல்காரர்களாகவும் மாதச் சம்பளத்திற்குப் பணிபுரிந்து வந்துள்ளனர். இக்கும்பல் கடந்த பிப்ரவரி முதல் அனைத்துலக அளவில் இயங்கி வந்தது தெரியவந்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

சம்பவ இடத்திலிருந்து 35 கைபேசிகள், 10 மடிக்கணினிகள் உள்ளிட்ட 65 ஆயிரம் ரிங்கிட் மதிப்புள்ள மின்னணு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இக்கும்பலின் உள்ளூர் ஒருங்கிணைப்பாளராகச் செயல்பட்ட சரவாக்கை சேர்ந்த முகமது லிங் முகமட் ஆடம் லிங் என்ற 25 வயதுடைய நபரை போலீஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர் என்று குமரேசன் தெரிவித்தார்.

Related News

சிறுவர்களுக்குப் பாலியல் தொல்லை: காப்பகப் பொறுப்பாளருக்கு 11 ஆண்டுகள் சிறை, 5 பிரம்படிகள்

சிறுவர்களுக்குப் பாலியல் தொல்லை: காப்பகப் பொறுப்பாளருக்கு 11 ஆண்டுகள் சிறை, 5 பிரம்படிகள்

மாமன்னரை  அவமதிக்கும் வகையில் 'AI' தொழில்நுட்பத்தில் போலி டிக் டாக் கணக்கு: புக்கிட் அமான் விசாரணை

மாமன்னரை அவமதிக்கும் வகையில் 'AI' தொழில்நுட்பத்தில் போலி டிக் டாக் கணக்கு: புக்கிட் அமான் விசாரணை

பொய் ஆவணங்கள் மூலம் 53,000 ரிங்கிட்  மருத்துவக் கோரிக்கை: தம்பதி உட்பட மூவர் எம்.ஏ.சி.சி-யால் கைது

பொய் ஆவணங்கள் மூலம் 53,000 ரிங்கிட் மருத்துவக் கோரிக்கை: தம்பதி உட்பட மூவர் எம்.ஏ.சி.சி-யால் கைது

விரைவுப் பேருந்து தீப்பற்றி எரிந்தது: 17 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்

விரைவுப் பேருந்து தீப்பற்றி எரிந்தது: 17 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்

ஐஸ் லோரியில் 1,000 லிட்டர் டீசல் கடத்தல்: முதியவர் கைது; 38,005 ரிங்கிட்  பொருட்கள் பறிமுதல்

ஐஸ் லோரியில் 1,000 லிட்டர் டீசல் கடத்தல்: முதியவர் கைது; 38,005 ரிங்கிட் பொருட்கள் பறிமுதல்

பேராக் ஆலய நிலப் பிரச்சினைகளில் 40% தீர்வு; தீர்க்கப்படும் வரை ஆலயங்கள் இடிக்கப்படாது: டத்தோ சிவநேசன் உறுதி

பேராக் ஆலய நிலப் பிரச்சினைகளில் 40% தீர்வு; தீர்க்கப்படும் வரை ஆலயங்கள் இடிக்கப்படாது: டத்தோ சிவநேசன் உறுதி