Jun 6, 2026
Thisaigal NewsYouTube
சிறுவர்களுக்குப் பாலியல் தொல்லை: காப்பகப் பொறுப்பாளருக்கு 11 ஆண்டுகள் சிறை, 5 பிரம்படிகள்
தற்போதைய செய்திகள்

சிறுவர்களுக்குப் பாலியல் தொல்லை: காப்பகப் பொறுப்பாளருக்கு 11 ஆண்டுகள் சிறை, 5 பிரம்படிகள்

Share:

பத்து கேவ்ஸ் பகுதியில் உள்ள சிறார்கள் நலக் காப்பகத்தில் 8 மற்றும் 10 வயதுடைய இரு சிறுவர்களுக்குப் பாலியல் தொல்லை மற்றும் இயற்கைக்கு மாறான முறையில் பாலியல் வன்கொடுமை இழைத்த குற்றச்சாட்டை ஒப்புக்கொண்ட 25 வயது காப்பகப் பொறுப்பாளர் வி. ரத்னா என்பவருக்கு அம்பாங், செஷன்ஸ் நீதிமன்றம் இன்று 11 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 5 பிரம்படிகளும் விதித்துள்ளது.

கடந்த பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களுக்கு இடையில் நிகழ்ந்ததாக கூறப்படும் இச்சம்பவம் தொடர்பாக, குற்றவியல் சட்டம் மற்றும் 2017 ஆம் ஆண்டு சிறார்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் சட்டத்தின் கீழ் ரத்னா மீது 6 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.

மேலும், சிறைக்காலத்தில் அவருக்குப் பாலியல் நடத்தைக்கான நல்லுரைகள் வழங்கப்பட வேண்டும் என்றும், தண்டனை காலம் முடிந்த பிறகு 2 ஆண்டுகளுக்குக் போலீஸ் துறையின் கண்காணிப்பில் இருக்க வேண்டும் என்றும் நீதிபதி நாடியா மாலெக் ஃபவ்சி உத்தரவிட்டுள்ளார்.

Related News

காட்டில் உயிருக்குப் போராடிய 14 நாட்கள்: மீட்கப்பட்ட மலையேற்ற வீராங்கனை உருக்கம்

காட்டில் உயிருக்குப் போராடிய 14 நாட்கள்: மீட்கப்பட்ட மலையேற்ற வீராங்கனை உருக்கம்

நெகிரி செம்பிலான் பாரம்பரியச் சிக்கல்: நீதிமன்றம் செல்லாமல் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க முடியும்

நெகிரி செம்பிலான் பாரம்பரியச் சிக்கல்: நீதிமன்றம் செல்லாமல் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க முடியும்

ஜோகூர் தேர்தல்: எதிர்க்கட்சிகள் மோதலைத் தவிர்த்து ஒன்றிணைய வேண்டும் – மூடா அழைப்பு

ஜோகூர் தேர்தல்: எதிர்க்கட்சிகள் மோதலைத் தவிர்த்து ஒன்றிணைய வேண்டும் – மூடா அழைப்பு

சிரம்பான், தாமான் துவாங்கு ஜாஃபர் ஸ்ரீ மகா ராஜ ராஜேஸ்வரர் தேவஸ்தான மகா கும்பாபிஷேகம்

சிரம்பான், தாமான் துவாங்கு ஜாஃபர் ஸ்ரீ மகா ராஜ ராஜேஸ்வரர் தேவஸ்தான மகா கும்பாபிஷேகம்

தொழில்நுட்பக் கோளாறு: கேஎல்ஐஏ  ரயில் சேவைகள் அனைத்தும் தற்காலிகமாக நிறுத்தம்

தொழில்நுட்பக் கோளாறு: கேஎல்ஐஏ ரயில் சேவைகள் அனைத்தும் தற்காலிகமாக நிறுத்தம்

 14 நாட்களாகக் காட்டில் தவித்த பெண் மலையேறி 'ஜாஸ்லிந்தா' பூர்வக்குடி மக்களால் பத்திரமாக மீட்பு

14 நாட்களாகக் காட்டில் தவித்த பெண் மலையேறி 'ஜாஸ்லிந்தா' பூர்வக்குடி மக்களால் பத்திரமாக மீட்பு