Mar 28, 2026
Thisaigal NewsYouTube
இயந்திரப் படகு கவிழ்ந்த சம்பவம்: அனைவரும் பாதுகாப்பு ஜேக்கெட் அணியவில்லை
தற்போதைய செய்திகள்

இயந்திரப் படகு கவிழ்ந்த சம்பவம்: அனைவரும் பாதுகாப்பு ஜேக்கெட் அணியவில்லை

Share:

பெலாபுஹான் கிளாங், ஜூன்.07-

கோலக்கிள்ளான் துறைமுகத்திற்கு அருகில் தஞ்சோங் ஹராப்பான் கடற்பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை இயந்திரப் படகு ஒன்று கவிழ்ந்த சம்பவத்தில், அதில் பயணித்த அனைவருமே பாதுகாப்பு ஜேக்கெட் அணியவில்லை என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது என்று வட கிள்ளான் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி S. விஜயராவ் தெரிவித்தார்.

அந்த இயந்திரப் படகை அதன் உரிமையாளரே செலுத்தியிருக்கிறார். கடல் நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றவர்கள், கட்டாயமாக பாதுகாப்பு ஜேக்கெட் அணிந்திருக்க வேண்டும் என்று தாம் பலமுறை வலியுறுத்தி வந்ததையும் விஜயராவ் சுட்டிக் காட்டினார்.

சம்பந்தப்பட்ட இயந்திரப் படகு கவிழ்ந்ததில் ஒரு சிறார் உட்பட மூவர் உயிரிழந்த வேளையில் கணவன், மனைவி இருவரைக் காணவில்லை என்று தெரிவிக்கப்பட்டது. இச்சம்பவம் தொடர்பில் இன்று செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசுகையில் விஜயராவ் மேற்கண்டவாறு கூறினார்.

Related News

ம.இ.கா-வின் மௌனம் நிராகரிப்புக்குச் சமம் - தக்கியுடின் ஹசான் எச்சரிக்கை

ம.இ.கா-வின் மௌனம் நிராகரிப்புக்குச் சமம் - தக்கியுடின் ஹசான் எச்சரிக்கை

கார்ப்பரேட் மாஃபியா' ஊழல் விவகாரம்: பாரபட்சமற்ற விசாரணைக்கு வான் சைபுல் வலியுறுத்தல்

கார்ப்பரேட் மாஃபியா' ஊழல் விவகாரம்: பாரபட்சமற்ற விசாரணைக்கு வான் சைபுல் வலியுறுத்தல்

9.5 மில்லியன் ரிங்கிட் பணப்பரிமாற்றம்: தொடர்புடைய நபரின் பெயரை  பகிரங்கமாக வெளியிடுக  - பி.கே.ஆர் இளைஞர் அணி அதிரடி கோரிக்கை

9.5 மில்லியன் ரிங்கிட் பணப்பரிமாற்றம்: தொடர்புடைய நபரின் பெயரை பகிரங்கமாக வெளியிடுக - பி.கே.ஆர் இளைஞர் அணி அதிரடி கோரிக்கை

இந்திய முஸ்லிம்  உணவகங்களில் விலை உயர்வு? – விளக்கம் கோரி உரிமையாளர் சங்கத்திற்கு அமைச்சு  அழைப்பு

இந்திய முஸ்லிம் உணவகங்களில் விலை உயர்வு? – விளக்கம் கோரி உரிமையாளர் சங்கத்திற்கு அமைச்சு அழைப்பு

சபா விவகாரம் பிலிப்பைன்ஸின் அரசியல் தந்திரம் - முதலமைச்சர் ஹாஜிஜி நூர் அதிரடி

சபா விவகாரம் பிலிப்பைன்ஸின் அரசியல் தந்திரம் - முதலமைச்சர் ஹாஜிஜி நூர் அதிரடி

மலாக்கா அணைகளில் நீர்மட்டம் சரிவு: கவலைப்படத் தேவையில்லை என மாநில அரசு உறுதி

மலாக்கா அணைகளில் நீர்மட்டம் சரிவு: கவலைப்படத் தேவையில்லை என மாநில அரசு உறுதி