Jul 6, 2026
Thisaigal NewsYouTube
மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்ததாக ஆடவர் மீது குற்றச்சாட்டு
தற்போதைய செய்திகள்

மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்ததாக ஆடவர் மீது குற்றச்சாட்டு

Share:

தங்காக், ஜூன்.10-

தனது மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்ததாக ஆடவர் ஒருவர், ஜோகூர், தங்காக் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டார்.

33 வயது முகமட் கைருல் அஸ்மி இத்நின் என்ற அந்த நபர், மாஜிஸ்திரேட் லீ கிம் கியாட் முன்னிலையில் நிறுத்தப்பட்டு, குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.

கடந்த ஜுன் 2ஆம் தேதி மாலை 5.30 மணியளவில் தங்காக், தாமான் சஹாயாவில் உள்ள ஒரு வீடமைப்புப் பகுதியில் அந்த நபர் இக்குற்றத்தைப் புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் மரணத் தண்டனை அல்லது கூடியபட்சம் 40 ஆண்டு சிறை மற்றும் பிரம்படித் தண்டனை விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டமான 302 பிரிவின் கீழ் அந்த நபர் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.

தனது 33 வயது மனைவி லேச்சா ஜுனுஸ் என்பவரைக் கொலை செய்ததாக அந்த நபர் குற்றச்சாட்டப்பட்டுள்ளார்.

Related News

15 நிரந்தர பேரிடர் நிவாரண மையங்கள் படிப்படியாக இயங்கத் தொடங்கும்: நாடாளுமன்றத்தில் தகவல்

15 நிரந்தர பேரிடர் நிவாரண மையங்கள் படிப்படியாக இயங்கத் தொடங்கும்: நாடாளுமன்றத்தில் தகவல்

பெர்லிங்-இல் குறைந்த வாக்குப்பதிவு அச்சம்: பக்காத்தான் ஹராப்பான்  வேட்பாளர் கவலை!

பெர்லிங்-இல் குறைந்த வாக்குப்பதிவு அச்சம்: பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் கவலை!

நஜிப்பை விடுவிக்கும் அதிகாரம் மாமன்னருக்கே உரியது; அரசியல் காரணங்கள் இல்லை: அமைச்சர் அஸாலினா

நஜிப்பை விடுவிக்கும் அதிகாரம் மாமன்னருக்கே உரியது; அரசியல் காரணங்கள் இல்லை: அமைச்சர் அஸாலினா

பிஏஎஸ் கட்சிக்கு நியமன சட்டமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்படுகிறதா?: ஜசெக வேட்பாளர் கேள்வி

பிஏஎஸ் கட்சிக்கு நியமன சட்டமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்படுகிறதா?: ஜசெக வேட்பாளர் கேள்வி

புதிதாக வரும் வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்குத் தற்காலிகத் தங்குமிடங்கள்: அமைச்சர் ஆர். ரமணன் தகவல்

புதிதாக வரும் வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்குத் தற்காலிகத் தங்குமிடங்கள்: அமைச்சர் ஆர். ரமணன் தகவல்

ஜோகூர் பாருவில்  உள்ளூர் பிரச்சினைகளுக்குத் தீர்வு: பக்காத்தான்  வேட்பாளர்கள் ஐந்து பேர் உறுதி

ஜோகூர் பாருவில் உள்ளூர் பிரச்சினைகளுக்குத் தீர்வு: பக்காத்தான் வேட்பாளர்கள் ஐந்து பேர் உறுதி