13 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட மெக்கானிக் ஒருவர், கோத்தா கினபாலு செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று, தன்னைக் குற்றமற்றவர் என்று கூறி விசாரணை கோரினார்.
23 வயதுடைய அந்த நபர், நீதிபதி மோனிகா லின்சுவா முன்னிலையில் இன்று ஆஜர்படுத்தப்பட்டார்.
அவர் மீது குற்றவியல் சட்டம் பிரிவு 376(2)(d) கீழ் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.
இந்த பிரிவின் கீழ் குற்றம் நிரூபிக்கப்பட்டால் 10 முதல் 30 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை மற்றும் பிரம்படிகள் விதிக்கப்படலாம்.
கடந்த பிப்ரவரி 8-ஆம் தேதி அதிகாலை 4.30 மணி முதல் 6 மணி வரை, கோத்தா கினபாலு பகுதியில் உள்ள வாடகை வீடு ஒன்றின் அறையில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.








