ஹந்தாவைரஸ் வைரஸ் பரவலுடன் தொடர்புடைய கப்பலில் பயணம் செய்த இரண்டு சிங்கப்பூர்வாசிகள், தனிமைப்படுத்தப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டு வருவதாக அந்நாட்டு தொற்றுநோய்கள் முகமையான சிடிஏ தெரிவித்துள்ளது.
உலக நாடுகள் பலவும், ஹந்தாவைரஸ் வைரஸ் பரவிய எம்வி ஹோண்டியஸ் என்ற கப்பலில் பயணம் செய்தவர்களைக் கண்காணித்து வருகின்றன.
அக்கப்பலில் பயணம் செய்த ஒரு டச்சு தம்பதியரும், ஜெர்மன் நாட்டவரும் ஹந்தாவைரஸ் வைரஸ் தொற்றுக்கு பலியாகியுள்ள நிலையில், மற்றவர்களின் நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றது.
ஹந்தாவைரஸ் பொதுவாக எலிகள் போன்ற விலங்குகள் மூலம் பரவக்கூடியது. என்றாலும் அரிதான சந்தர்ப்பங்களில் மனிதர்களிடையேயும் பரவும் என்றும் கூறப்படுகின்றது.
தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ள அந்த இரு சிங்கப்பூர்வாசிகளும் 67 மற்றும் 65 வயதுடைய ஆண்கள் எனத் தகவல்கள் கூறுகின்றன.
அவர்கள் இருவரும் தேசிய தொற்றுநோய்கள் மையத்தில் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர் என்றுஹந்தாவைரஸ்ம் சிடிஏ குறிப்பிட்டுள்ளது.








