May 21, 2026
Thisaigal NewsYouTube
ஹான்டா வைரஸ் அச்சுறுத்தல்: எல்லைகளில் தீவிர கண்காணிப்பு; 20,000 கப்பல்கள் சோதனை!
தற்போதைய செய்திகள்

ஹான்டா வைரஸ் அச்சுறுத்தல்: எல்லைகளில் தீவிர கண்காணிப்பு; 20,000 கப்பல்கள் சோதனை!

Share:

சைபர்ஜெயா, மே.10-

மலேசியாவிற்குள் Hantavirus ஊடுருவுவதைத் தடுக்க அனைத்துப் பன்னாட்டு நுழைவாயில்களிலும் சுகாதாரச் சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகச் சுகாதார அமைச்சர் டத்தோ ஶ்ரீ டாக்டர் ஸுல்கிஃப்லி அஹ்மாட் தெரிவித்துள்ளார். எலி மூலம் பரவக்கூடிய இந்த வைரஸ் பாதிப்பு இதுவரை மலேசியாவில் எவருக்கும் ஏற்படவில்லை என்றாலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இதுவரை 22,367 கப்பல்களும் படகுகளும் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.

குறிப்பாக, இந்நோய் கண்டறியப்பட்ட நாடுகளிலிருந்து வரும் கப்பல்கள் கண்காணிக்கப்படுவதோடு, மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம், PCR பரிசோதனை மூலம் இவ்வைரஸைக் கண்டறியத் தயார் நிலையில் உள்ளதாகவும் அவர் உறுதிபடக் கூறியுள்ளார்.

Related News