தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று, புதிய முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள சி. ஜோசப் விஜய் மற்றும் அவரது தமிழக வெற்றித் கழகத்திற்கு பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணி தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளது.
இது குறித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் டத்தோஸ்ரீ தக்கியுடின் ஹசான் விடுத்துள்ள அறிக்கையில், விஜய்யின் இந்த வெற்றி, சமூக நீதி மற்றும் நவீனமயமாக்கல் மீதான மக்களின் நம்பிக்கையைப் பிரதிபலிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் நடிகர் மற்றும் மனிதாபிமானப் பணிகளுக்காக மலேசிய இந்திய இளைஞர்களிடையே விஜய் பெரும் வரவேற்பைப் பெற்றவர் என்றும், தமிழகத்திற்கும் மலேசிய இந்தியர்களுக்கும் இடையிலான வரலாற்றுத் தொடர்பால் அவரது அரசியல் வருகை மிகுந்த ஆர்வத்துடன் கவனிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.








