புத்ராஜெயா, ஜூன்.05-
முன்னாள் நிதி அமைச்சர் காலஞ்சென்ற துன் டாயிம் ஸைனுடினுக்குச் சொந்தமான இல்ஹாம் கட்டடத்தைப் பறிமுதல் செய்வதற்கு துணை பப்ளிக் பிராசிகியூட்டரிடமிருந்து மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம் அனுமதி பெற்றுள்ளது.
கோலாலம்பூர் மாநகரின் மையப் பகுதியான பெர்சியாரான் கேஎல்சிசி அருகில் ஜாலான் பின்ஜாயில் வீற்றிருக்கும் 60 மாடிகளைக் கொண்ட 7 ஆவது மிக உயரமான கட்டடமான துன் டாயிம் ஸைனுடினுக்குச் சொந்தமான அந்தக் கட்டடம், சட்டவிரோதப் பண மாற்றம் சட்டத்தின் கீழ் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக எஸ்பிஆர்எம் வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
குற்றவியல் சட்டத்தின் கீழ் துணை பப்ளிக் பிராசிகியூட்டருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்திற்கு ஏற்ப இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக எஸ்பிஆர்எம் குறிப்பிட்டுள்ளது.








