கூச்சிங், ஜூன்.08-
தேசிய நீர் சேவைகள் ஆணையம் (SPAN) மூலம் மத்திய அரசு இந்த ஆண்டு நாடு முழுவதும் நீர் விநியோக அமைப்பின் திறனை மேம்படுத்த 796.4 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கியுள்ளது. இந்த ஒதுக்கீடு சபா, சரவாக், கிளந்தான், கெடா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் நீர் விநியோகத் திட்டங்களை செயல்படுத்த உதவும் என்று துணைப் பிரதமர் டத்தோ ஶ்ரீ ஃபாடில்லா யூசோப் கூறினார்.
இவ்வாண்டு மே மாத நிலவரப்படி, நாடு முழுவதும் 28 நீர் விநியோகத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும், இவற்றில் ஏழு திட்டங்கள் இந்த ஆண்டு நிறைவடையும் என்றும் அவர் தெரிவித்தார். பருவமழை மாற்றத்தால் ஏற்படும் வறண்ட காலநிலையை எதிர்கொள்ள நாடு தயாராக இருப்பதாகவும், நீர் இருப்பு பாதுகாப்பான அளவில் இருப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.








