தமிழக வெற்றி கழகத்தின் தேர்தல் வெற்றிக்குப் பிறகு, அக்கட்சியின் தலைவர் விஜய் தமிழக முதல்வராகப் பதவியேற்பதைத் தடுக்க அதிகார வர்க்கம் திரைமறைவு வேலைகளில் ஈடுபடுகிறதா என்ற சந்தேகம் தற்போது காட்டுத்தீயாய் பரவி வருகிறது.
பெரும்பான்மை பலம் இருந்தும், ஆட்சியமைக்க அழைக்காமல் ஆளுநர் மாளிகை காலம் தாழ்த்துவது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. "சட்டமன்றத்தில்தான் பலத்தை நிரூபிக்க வேண்டும்" என ஏற்கனவே உச்சநீதிமன்றமே தெளிவுபடுத்திய பின்னரும், ஆளுநர் மர்ம அமைதி காப்பது டெல்லியின் அழுத்தமா அல்லது உள்ளூர் அரசியல் சக்திகளின் நரித்தந்திரமா என்ற விவாதம் மேலெழுந்துள்ளது.
தளபதி விஜய்யை முதல்வர் நாற்காலியில் அமரவிடாமல் செய்ய, எம்.எல்.ஏ-க்களை வளைக்கும் பேரங்கள் நடப்பதாகவும், இதன் மூலம் மக்கள் தீர்ப்பு சிதறடிக்கப்படுவதாகவும் அரசியல் விமர்சகர்கள் அஞ்சுகின்றனர். இருப்பினும், இத்தகைய முட்டுக்கட்டைகளையும் அதிகாரப் போட்டியையும் தகர்த்தெறிந்து, தளபதி விஜய் அரியணை ஏறுவதற்கு உறுதி பூண்டுள்ளார் என்று தமிழக வெற்றி கழக வட்டாரங்கள் உறுதியாகத் தெரிவிக்கின்றன.








