மலாக்கா மாநிலத்தில் கால்நடைகளை கண்காணிக்கும் முறையை மேம்படுத்தும் நோக்கில், க்யூஆர் குறியீட்டு அடையாள அமைப்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த புதிய முயற்சி, கால்நடைத் துறையை நவீன ஸ்மார்ட் தொழில்நுட்பத்தின் மூலம் மேம்படுத்தும் மாநில அரசாங்கத்தின் திட்டத்தின் ஒரு பகுதியாக அமைகிறது என்று அம்மாநில முதல்வர் டத்தோ ஸ்ரீ அப் ரவூப் யூசோவ் தெரிவித்துள்ளார்.
இத்திட்டத்தின் மூலம் பண்ணைகளில், ஒவ்வொரு கால்நடைக்கும் தனித்துவமான க்யூஆர் குறியீடு வழங்கப்படவுள்ளது.
அதில் உரிமையாளரின் விவரங்கள், பண்ணை அமைவிடம் மற்றும் கால்நடையின் உடல்நல பதிவுகள் உள்ளிட்ட தகவல்கள் இடம்பெறவுள்ளன.
கால்நடைகள் திருடப்பட்டாலோ அல்லது கடத்தப்பட்டாலோ, அவற்றின் தகவல்களை உடனடியாக சரிபார்க்க இந்த அமைப்பு உதவும் என்றும் அப் ரவூப் யூசோவ் குறிப்பிட்டுள்ளார்.








