மலேசிய இந்திய உருமாற்றப் பிரிவான மித்ரா , இந்தியச் சமுதாயத்தைச் சேர்ந்த சிறுவர்கள் தரமான ஆரம்பக் கல்வியைப் பெறுவதை உறுதி செய்யும் நோக்கில் 'செலிக் மதானி திட்டம் எனும் சிறப்புத் திட்டத்தை அறிவித்துள்ளது.
மடானி அரசாங்கத்தின் இந்த முன்முயற்சியின் கீழ், குறைந்த வருமானம் பெறும் B40 இந்தியக் குடும்பங்களைச் சேர்ந்த 4 முதல் 6 வயது வரையிலான சிறுவர்களுக்குக் கல்விக்கான நிதியுதவி வழங்கப்படவுள்ளது.
இத்திட்டத்தின் சிறப்பம்சங்கள்:
• பாலர் பள்ளி கட்டணம்: மாதம் RM150 வரை நிதியுதவி.
• காலை உணவு உதவி: மாதம் RM80 வரை நிதியுதவி.
இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளத் தகுதியுள்ள பெற்றோர் மற்றும் பாதுகாவலர்கள் வரும் 2026 மே 20-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ளவர்கள் அதிகாரப்பூர்வ விண்ணப்பப் படிவத்தை மித்ராவின் படிவ இணைப்பின் வாயிலாகவோ அல்லது விளம்பரச் சுவரொட்டியில் உள்ள QR குறியீட்டை ஸ்கேன் செய்தோ தங்களின் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம் என்று மித்ரா வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.








