கோலாலம்பூர், மே.10-
மலேசியாவில் குழந்தைப் பேறுக்காகக் காத்திருக்கும் 47 ஆயிரம் தம்பதியருக்கு உதவும் வகையில், தரமான, மலிவான சிகிச்சைக்கான புதிய 'BuAI' உதவித் திட்டத்தை மகளிர், குடும்ப, சமூகநல மேம்பாட்டு அமைச்சு அறிமுகப்படுத்தியுள்ளது. தேசிய அன்னையர் தினக் கொண்டாட்டத்தில் அறிவிக்கப்பட்ட இத்திட்டம், ஷா ஆலமில் அமையவுள்ள தேசிய கருவுறுதல் மையத்தின் மூலம் தம்பதியரின் நீண்ட காலக் கனவை நனவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளதாக அமைச்சர் டத்தோ ஶ்ரீ நான்சி ஷுக்ரி தெரிவித்தார்.
"முன்கூட்டியே தொடங்குவது சிறந்தது" எனும் தாரக மந்திரத்துடன், நவீன மருத்துவத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மலேசியக் குடும்பங்களின் மகிழ்ச்சியை உறுதிப்படுத்த அரசாங்கம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.








