May 21, 2026
Thisaigal NewsYouTube
மாஸ்கோ சிறப்புப் பயணம் நிறைவு: நாடு திரும்புகிறார் மாமன்னர் சுல்தான் இப்ராகிம்
தற்போதைய செய்திகள்

மாஸ்கோ சிறப்புப் பயணம் நிறைவு: நாடு திரும்புகிறார் மாமன்னர் சுல்தான் இப்ராகிம்

Share:

மாட்சிமை தங்கிய மலேசிய மாமன்னர் சுல்தான் இப்ராகிம் தமது அதிகாரப்பூர்வ மாஸ்கோ பயணத்தை நிறைவு செய்து மலேசியாவிற்குத் திரும்புகிறார்.

மன்னரின் அதிகாரப்பூர்வ பேஸ்புக் பதிவின்படி, அவரது தனியார் விமானம் நேற்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3.30 மணியளவில் வினுகோவோ-2 சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்டது.

கடந்த மே 6-ஆம் தேதி, மாஸ்கோவுக்கு பயணம் மேற்கொண்ட சுல்தான் இப்ராகிம், அங்கு கடந்த மே 8-ஆம் தேதி நடைபெற்ற வெற்றி நாள் கொண்டாட்டத்தில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் விடுத்த இந்த அழைப்பானது, மலேசியாவுக்கு ரஷ்யா அளிக்கும் உயர்ந்த மரியாதையும், இருநாடுகளுக்கிடையிலான உறவுகள் வலுப்பெற்று வருவதன் பிரதிபலிப்பாகவும் பார்க்கப்படுகின்றது.

Related News