சிலாங்கூர் ஆட்சிஹ்யாளர் சுல்தான் ஷராஃபுதீன் இத்ரிஸ் ஷா ,
செரி கெம்பாங்கான் சட்டமன்ற உறுப்பினர் வோங் சியூ கி, முன்னாள் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் ரோனி லியூ ஆகியோரை, ருக்குன் நெகாராவான நாட்டின் தேசியக் கோட்பாட்டின் உண்மையான பொருளை உணர்ந்து கொள்ளும் பொருட்டு, வாரத்திற்கு ஒருமுறை சிலாங்கூர் சதுக்கமானடத்தாரான் சிலாங்கூரில் உள்ள நினைவுச் சின்னத்திற்குச் சென்று வருமாறு அறிவுறுத்தியுள்ளார்.
1969-ஆம் ஆண்டு மே 13 இனக்கலவரத்திற்குப் பிறகு உருவாக்கப்பட்ட தேசியக் கோட்பாட்டின் வரலாற்றையும், அரசியலமைப்புக்கு உட்பட்ட முடியாட்சி முறைக்கு மதிப்பளிப்பதன் அவசியத்தையும் இவர்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்று சுல்தான் வலியுறுத்தியுள்ளார். மேலும், அனைத்து சிலாங்கூர் சட்டமன்ற உறுப்பினர்களும் மாதத்திற்கு இருமுறை அந்த இடத்திற்குச் சென்று தேசியக் கோட்பாட்டின் விழுமியங்களை வாசித்து உள்வாங்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.








