Mar 28, 2026
Thisaigal NewsYouTube
மரணத் தண்டனை சட்டத்தின் கீழ் ஆடவர் மீது குற்றச்சாட்டு
தற்போதைய செய்திகள்

மரணத் தண்டனை சட்டத்தின் கீழ் ஆடவர் மீது குற்றச்சாட்டு

Share:

பொந்தியான், ஜூன்.04-

போதைப் பொருள் கடத்தியது தொடர்பில் மரணத் தண்டனை விதிக்க வகை செய்யும் சட்டத்தின் கீழ் ஆடவர் ஒருவர், ஜோகூர், பொந்தியான் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டார்.

35 வயது லாவ் கியாட் லிம் என்ற அந்த நபர், கடந்த மே 21 ஆம் தேதி மாலை 6.10 மணியளவில் பொந்தியான், தாமான் முத்தியாராவில் உள்ள ஒரு வீட்டில் 6 கிலோவிற்கும் அதிகமான போதைப் பொருளைக் கடத்தியதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

மாஜிஸ்திரேட் அரினா அஸ்மின் அஹ்மாட் முன்னிலையில் நிறுத்தப்பட்ட அந்த ஆடவர், தனக்கு எதிரான குற்றத்தை மறுத்து விசாரணைக் கோரியுள்ளார்.

குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் மரணத் தண்டனை அல்லது ஆயள் தண்டனை விதிக்க வகை செய்யும் 1952 ஆம் ஆண்டு அபாயகர பொருள் சட்டத்தின் கீழ் அந்த நபர் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.

Related News

ம.இ.கா-வின் மௌனம் நிராகரிப்புக்குச் சமம் - தக்கியுடின் ஹசான் எச்சரிக்கை

ம.இ.கா-வின் மௌனம் நிராகரிப்புக்குச் சமம் - தக்கியுடின் ஹசான் எச்சரிக்கை

கார்ப்பரேட் மாஃபியா' ஊழல் விவகாரம்: பாரபட்சமற்ற விசாரணைக்கு வான் சைபுல் வலியுறுத்தல்

கார்ப்பரேட் மாஃபியா' ஊழல் விவகாரம்: பாரபட்சமற்ற விசாரணைக்கு வான் சைபுல் வலியுறுத்தல்

9.5 மில்லியன் ரிங்கிட் பணப்பரிமாற்றம்: தொடர்புடைய நபரின் பெயரை  பகிரங்கமாக வெளியிடுக  - பி.கே.ஆர் இளைஞர் அணி அதிரடி கோரிக்கை

9.5 மில்லியன் ரிங்கிட் பணப்பரிமாற்றம்: தொடர்புடைய நபரின் பெயரை பகிரங்கமாக வெளியிடுக - பி.கே.ஆர் இளைஞர் அணி அதிரடி கோரிக்கை

இந்திய முஸ்லிம்  உணவகங்களில் விலை உயர்வு? – விளக்கம் கோரி உரிமையாளர் சங்கத்திற்கு அமைச்சு  அழைப்பு

இந்திய முஸ்லிம் உணவகங்களில் விலை உயர்வு? – விளக்கம் கோரி உரிமையாளர் சங்கத்திற்கு அமைச்சு அழைப்பு

சபா விவகாரம் பிலிப்பைன்ஸின் அரசியல் தந்திரம் - முதலமைச்சர் ஹாஜிஜி நூர் அதிரடி

சபா விவகாரம் பிலிப்பைன்ஸின் அரசியல் தந்திரம் - முதலமைச்சர் ஹாஜிஜி நூர் அதிரடி

மலாக்கா அணைகளில் நீர்மட்டம் சரிவு: கவலைப்படத் தேவையில்லை என மாநில அரசு உறுதி

மலாக்கா அணைகளில் நீர்மட்டம் சரிவு: கவலைப்படத் தேவையில்லை என மாநில அரசு உறுதி