போர்ட்டிக்சன், ஜூன்.04-
கடற்கரை உட்பட போர்ட்டிக்சன் மாவட்டத்தில் பொது இடங்களில் வளர்ப்புப் பிராணியான நாய்கள் உடன் கொண்டு வரப்படுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு கொண்டு வருவது கண்டுபிடிக்கப்பட்டால் 250 ரிங்கிட் அபராதம் விதிக்கப்படும் என்று மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் ஜ. அருள்குமார் தெரிவித்தார்.
எந்ததெந்த இடங்களில் வளர்ப்புப் பிராணிகளைக் கொண்டு வரக்கூடாது என்பது குறித்து பொதுமக்களுக்கு அறிவுறுத்துவதற்கு ஆங்காங்கு அறிவிப்புப் பலகைகள் வைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
2008 ஆம் ஆண்டு போர்ட்டிக்சன் மாவட்ட துணைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் விளக்கினார்.








