Mar 28, 2026
Thisaigal NewsYouTube
பாலஸ்தீனர்களின் உரிமையைத் தற்காப்பதில் துருக்கியுடன் மலேசியா உறுதியுடன் நிற்கும் – பிரதமர் அன்வார் திட்டவட்டம்
தற்போதைய செய்திகள்

பாலஸ்தீனர்களின் உரிமையைத் தற்காப்பதில் துருக்கியுடன் மலேசியா உறுதியுடன் நிற்கும் – பிரதமர் அன்வார் திட்டவட்டம்

Share:

கோலாலம்பூர், ஜூன்.06-

பாலஸ்தீன மக்களின் போராட்டத்தைத் தொடர்ந்து ஆதரித்து, அவர்களின் உரிமைகள் மற்றும் சுயமரியாதையைக் காப்பதில் துருக்கியுடன் இணைந்து, உறுதியாக நிற்பதற்கு மலேசியா உறுதி பூண்டுள்ளதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

துருக்கிய அதிபர் ரெசெப் தயிப் எர்டோகனிடமிருந்து தொலைபேசி அழைப்பைப் பெற்ற டத்தோஸ்ரீ அன்வார், ஒடுக்கப்பட்ட பாலஸ்தீனியர்களின் குரல்களைப் பாதுகாப்பதில் துருக்கி அதிபரின் உறுதியான நிலைப்பாட்டிற்குத் தனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொண்டார்.

காஸா மக்களின் துன்பங்கள் குறித்து உலகம் இன்னமும் வாய் மூடி மெளனியாக இருந்து விட முடியாது. பாலஸ்தீன மக்களின் உரிமைகள் மற்றும் சுயமரியாதையைப் பாதுகாக்கக் கிடைக்கக் கூடிய அனைத்து வழிகளையும், திறன்களையும் பயன்படுத்துவதற்கான அதிபர் ரெசெப் தயிப் எர்டோகன் நிலைப்பாட்டை மலேசியா நிச்சயமாக வரவேற்கிறது, முழுமையாக ஆதரிக்கிறது என்று அன்வார் கூறினார்.

Related News

ம.இ.கா-வின் மௌனம் நிராகரிப்புக்குச் சமம் - தக்கியுடின் ஹசான் எச்சரிக்கை

ம.இ.கா-வின் மௌனம் நிராகரிப்புக்குச் சமம் - தக்கியுடின் ஹசான் எச்சரிக்கை

கார்ப்பரேட் மாஃபியா' ஊழல் விவகாரம்: பாரபட்சமற்ற விசாரணைக்கு வான் சைபுல் வலியுறுத்தல்

கார்ப்பரேட் மாஃபியா' ஊழல் விவகாரம்: பாரபட்சமற்ற விசாரணைக்கு வான் சைபுல் வலியுறுத்தல்

9.5 மில்லியன் ரிங்கிட் பணப்பரிமாற்றம்: தொடர்புடைய நபரின் பெயரை  பகிரங்கமாக வெளியிடுக  - பி.கே.ஆர் இளைஞர் அணி அதிரடி கோரிக்கை

9.5 மில்லியன் ரிங்கிட் பணப்பரிமாற்றம்: தொடர்புடைய நபரின் பெயரை பகிரங்கமாக வெளியிடுக - பி.கே.ஆர் இளைஞர் அணி அதிரடி கோரிக்கை

இந்திய முஸ்லிம்  உணவகங்களில் விலை உயர்வு? – விளக்கம் கோரி உரிமையாளர் சங்கத்திற்கு அமைச்சு  அழைப்பு

இந்திய முஸ்லிம் உணவகங்களில் விலை உயர்வு? – விளக்கம் கோரி உரிமையாளர் சங்கத்திற்கு அமைச்சு அழைப்பு

சபா விவகாரம் பிலிப்பைன்ஸின் அரசியல் தந்திரம் - முதலமைச்சர் ஹாஜிஜி நூர் அதிரடி

சபா விவகாரம் பிலிப்பைன்ஸின் அரசியல் தந்திரம் - முதலமைச்சர் ஹாஜிஜி நூர் அதிரடி

மலாக்கா அணைகளில் நீர்மட்டம் சரிவு: கவலைப்படத் தேவையில்லை என மாநில அரசு உறுதி

மலாக்கா அணைகளில் நீர்மட்டம் சரிவு: கவலைப்படத் தேவையில்லை என மாநில அரசு உறுதி