கோலாலம்பூர், ஜூன்.04-
முன்னாள் உதவியாளர் ஒருவர் தமக்கு எதிராகத் தொடுத்துள்ள வழக்கில் பிரதமர் என்ற முறையில் சட்டப் பாதுகாப்பை தாம் கோருவதாகக் கூறப்படுவதை டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மறுத்துள்ளார்.
இன்று கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் தனது விண்ணப்பத்தை நிராகரித்து இருப்பது தொடர்பில் தனது முகநூலில் டத்தோஸ்ரீ அன்வார், அரசியலமைப்புச் சட்டத்தை முன்னிறுத்தியே தாம் 8 கேள்விகளை முன்வைத்திருப்பதாகவும், அவை சட்டப் பாதுகாப்பு கோருவதாக பொருள்படாது என்று அன்வார் விளக்கினார்.
எனினும் தமது தலைமையிலான அரசாங்கத்தில் நீதிபரிபாலானத்துறை, நீதிமன்றங்களின் சுதந்திரம், அவற்றின் நிர்வாகத் திறன், கெளரவம் ஆகியவை தொடர்ந்து நிலைநாட்டப்படுவது உறுதிச் செய்யப்படும் என்று அன்வார் விளக்கம் அளித்துள்ளார்.








