May 21, 2026
Thisaigal NewsYouTube
நாளை நீதிமன்றத்தில் முன்னாள் நாடாளுமன்ற உதவியாளர், 'டான் ஸ்ரீ' மீது ஊழல் வழக்கு!
தற்போதைய செய்திகள்

நாளை நீதிமன்றத்தில் முன்னாள் நாடாளுமன்ற உதவியாளர், 'டான் ஸ்ரீ' மீது ஊழல் வழக்கு!

Share:

கோலாலம்பூர், மே.10-

கல்வித் துறைக்கான விவேவக் திரை எனப்படும் SMART BOARD கொள்முதலில் முறைகேடு செய்ததாகக் கூறப்படும் புகாரில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் சிறப்பு உதவியாளர் நாளை கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் அதிகாரப்பூர்வமாகக் குற்றம் சாட்டப்பட உள்ளார். இவருடன் இணைந்து, சுமார் 300 மில்லியன் ரிங்கிட் முதலீட்டு மோசடியில் தொடர்புடையதாகச் சந்தேகிக்கப்படும் பிரபல இஸ்லாமிய நிதித்துறை நிபுணரான 'டான் ஸ்ரீ' தகுதி கொண்ட நபரும் ஒரு நிறுவன இயக்குநரும் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட உள்ளனர்.

ஊழல் தடுப்பு ஆணையத்தின் நீண்ட கால விசாரணைக்குப் பிறகு, இவர்கள் மூவர் மீதும் நாளை காலை 8:30 மணியளவில் இந்த மோசடி வழக்குகள் பதியப்படவிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related News