கோலாலம்பூர், ஜாலான் மஸ்ஜித் இந்தியாவில் ஏற்பட்ட நிலக்குழி விபத்தில் சிக்கி, மாயமான இந்தியச் சுற்றுலாப் பயணி விஜயலட்சுமியின் குடும்பத்தினர், அதிகாரப்பூர்வ மரணச் சான்றிதழைப் பெற்றனர்.
அந்த ஆவணமானது, புத்ராஜெயா தேசிய பதிவிலாகா மூலமாக, உயிரிழந்த ஜி.விஜயலட்சுமியின், 28 வயது மகன் சூர்யா மடையாவிடம் ஒப்படைக்கப்பட்டதாக அவர்களது குடும்ப வழக்கறிஞர் எம். பார்த்திபன் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், அக்குடும்பத்தினருக்கான இழப்பீட்டைப் பெறும் நடவடிக்கைகளில் தற்போது முழு கவனமும் செலுத்தப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அக்குடும்பத்தினர் இன்னும் மலேசியாவில் தங்கியிருப்பதால் ஏற்படும் செலவுகளை குறைக்கும் வகையில், இழப்பீட்டு நடவடிக்கைகளை அதிகாரிகள் விரைவுபடுத்துவார்கள் தாம் நம்புவதாகவும் எம். பார்த்திபன் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
முன்னதாக, விஜயலட்சியின் மறைவிற்கு அவரது குடும்பத்தினர் 8 லட்சத்து 25 ஆயிரம் ரிங்கிட் இழப்பீடு கோரியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.








