Jul 6, 2026
Thisaigal NewsYouTube
அது திடீர் மாரடைப்பால் ஏற்பட்ட விபத்து
தற்போதைய செய்திகள்

அது திடீர் மாரடைப்பால் ஏற்பட்ட விபத்து

Share:

கோலாலம்பூர், ஜூன்.02-

கடந்த சனிக்கிழமை காலை 11 மணியளவில் கோலாலம்பூர், ஜாலான் அம்பாங்கில் சமிக்கை விளக்குப் பகுதியில் நின்று கொண்டு இருந்த ஒரு காரை மோதி, அதன் ஓட்டுநரான மாது ஒருவருக்குக் காயத்தை ஏற்படுத்திய சம்பவமானது, அக்காரை மோதிய டொயோட்டா கால்டீனா வாகனமோட்டிக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டுள்ளது என்று போலீசார் விளக்கம் அளித்தனர்.

டொயோட்டா கால்டீனா ரகக் காரைச் செலுத்திய 57 வயது நபருக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து காரின் ஸ்டேரிங்கை பிடிக்க இயலாமல் அவரின் கைகள் நழுவின. இந்நிலையில் கார் கட்டுப்பாட்டை இழந்து, அடுத்தச் சாலைக்கு நுழைந்தது என்று கோலாலம்பூர் போக்குவரத்து போலீஸ் தலைவர் முகமட் ஸாம்ஸூரி முகமட் இசா தெரிவித்தார்.

ஜாலான் அம்பாங்கில் உள்ள கிளேனிகல்ஸ் மருத்துவமனையின் முன் நிகழ்ந்த இந்தச் சம்பவத்தில் ஜேக்கோ 7 ரக வாகனத்தைச் செலுத்திய 49 வயது மாது, காயங்களுக்கு ஆளானார். அவரின் வாகனம் சேதமுற்றதுடன், அவரின் கார் நிலைத்தன்மையை இழந்து பின்னோக்கிச் சென்றதில் இரு கார்களும் சேதமுற்றதாக ஸாம்ஸூரி குறிப்பிட்டார்.

Related News

பாஸ்  கட்சியின் அரசியல் உத்தரவுகளைப் புறக்கணிக்குமாறு மாட் சாபு அழைப்பு

பாஸ் கட்சியின் அரசியல் உத்தரவுகளைப் புறக்கணிக்குமாறு மாட் சாபு அழைப்பு

15 நிரந்தர பேரிடர் நிவாரண மையங்கள் படிப்படியாக இயங்கத் தொடங்கும்: நாடாளுமன்றத்தில் தகவல்

15 நிரந்தர பேரிடர் நிவாரண மையங்கள் படிப்படியாக இயங்கத் தொடங்கும்: நாடாளுமன்றத்தில் தகவல்

பெர்லிங்-இல் குறைந்த வாக்குப்பதிவு அச்சம்: பக்காத்தான் ஹராப்பான்  வேட்பாளர் கவலை!

பெர்லிங்-இல் குறைந்த வாக்குப்பதிவு அச்சம்: பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் கவலை!

நஜிப்பை விடுவிக்கும் அதிகாரம் மாமன்னருக்கே உரியது; அரசியல் காரணங்கள் இல்லை: அமைச்சர் அஸாலினா

நஜிப்பை விடுவிக்கும் அதிகாரம் மாமன்னருக்கே உரியது; அரசியல் காரணங்கள் இல்லை: அமைச்சர் அஸாலினா

பிஏஎஸ் கட்சிக்கு நியமன சட்டமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்படுகிறதா?: ஜசெக வேட்பாளர் கேள்வி

பிஏஎஸ் கட்சிக்கு நியமன சட்டமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்படுகிறதா?: ஜசெக வேட்பாளர் கேள்வி

புதிதாக வரும் வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்குத் தற்காலிகத் தங்குமிடங்கள்: அமைச்சர் ஆர். ரமணன் தகவல்

புதிதாக வரும் வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்குத் தற்காலிகத் தங்குமிடங்கள்: அமைச்சர் ஆர். ரமணன் தகவல்