Jul 27, 2026
Thisaigal NewsYouTube
வெப்பப் பக்கவாதத்திற்கு மேலும் ஒரு சிறுவன் பலி
தற்போதைய செய்திகள்

வெப்பப் பக்கவாதத்திற்கு மேலும் ஒரு சிறுவன் பலி

Share:

கோடை வெப்ப பக்கவாத தாக்குதலுக்கு ஆளாகியிருக்கலாம் என்று நம்பப்படும் மேலும் ஒரு சிறுவன் உயிரிழந்துள்ளார். ஷாரோல் ஐரில் முகமட் ஹெகாக் என்ற அந்த 12 வயது சிறுவன், ஜோகூர், குளுவா​ங்​, என்சே, பெசார் ஹஜ்ஜா கல்சொம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்ததாக அச்சிறுவனின் தந்தை ஷரோல் அஸ்மி தெரிவித்தார். கடந்த ஞா​​​யிற்றுக்கிழமை தமது இரு மகன்களும் , மனைவியும் காய்சலினால் மருந்து உட்கொண்டிருந்த நிலையில் அவர்களை குளிர்சாதன வசதி கொண்ட வரவேற்பு அறையில் உறங்கச் சொன்னதாக தந்தை ஷரோல் அஸ்மி குறிப்பிட்டார். அப்போது பலத்த அலறல் சத்தம் கேட்டு வரவேற்பு அறைக்கு ஓடி சென்று பார்த்த போது தமது இளைய மகன் ஷாரோல் ஐரில் நடுங்கிக்கொண்டு இருந்ததைத் தொடர்ந்து உடன​டியாக மருத்துவமனைக்கு ​தூக்கிச் சென்றதாக தந்தை ஷரோல் அஸ்மி தெரிவித்துள்ளார்.

Related News