கோடை வெப்ப பக்கவாத தாக்குதலுக்கு ஆளாகியிருக்கலாம் என்று நம்பப்படும் மேலும் ஒரு சிறுவன் உயிரிழந்துள்ளார். ஷாரோல் ஐரில் முகமட் ஹெகாக் என்ற அந்த 12 வயது சிறுவன், ஜோகூர், குளுவாங், என்சே, பெசார் ஹஜ்ஜா கல்சொம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்ததாக அச்சிறுவனின் தந்தை ஷரோல் அஸ்மி தெரிவித்தார். கடந்த ஞாயிற்றுக்கிழமை தமது இரு மகன்களும் , மனைவியும் காய்சலினால் மருந்து உட்கொண்டிருந்த நிலையில் அவர்களை குளிர்சாதன வசதி கொண்ட வரவேற்பு அறையில் உறங்கச் சொன்னதாக தந்தை ஷரோல் அஸ்மி குறிப்பிட்டார். அப்போது பலத்த அலறல் சத்தம் கேட்டு வரவேற்பு அறைக்கு ஓடி சென்று பார்த்த போது தமது இளைய மகன் ஷாரோல் ஐரில் நடுங்கிக்கொண்டு இருந்ததைத் தொடர்ந்து உடனடியாக மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றதாக தந்தை ஷரோல் அஸ்மி தெரிவித்துள்ளார்.

Related News

சிலாங்கூர் சிஐடி போலீஸ் அதிகாரி மர்ம மரணம் - ஷா ஆலம் அடுக்குமாடிக் குடியிருப்பிலிருந்து கீழே விழுந்ததாக சந்தேகம்

சிறைபிடிக்கப்பட்டுள்ள 25 மலேசியர்களையும் உடனடியாக விடுவிக்க வேண்டும் / இஸ்ரேலிய படையினரிடம் மலேசியா வலியுறுத்தல்

அரசாங்க சுகாதார நிலையத்தில் சீன மொழியில் கண்காணிப்பு அட்டை வழங்கப்பட்டது எப்படி? - சுகாதாரத்துறை விளக்கம்

சிலாங்கூரில் வேப் திரவத்தில் போதைப் பொருள் கலந்து விற்பனை - 6 பேர் கைது

ஜோகூர் ஆர்&ஆர் பகுதியில் மக்களோடு மக்களாக காலை உணவருந்திய மாமன்னர் சுல்தான் இப்ராகிம்


