Mar 28, 2026
Thisaigal NewsYouTube
ஒற்றுமை என்பது தேர்வுக்குரியது அல்ல, அது நாட்டின் தேவை
தற்போதைய செய்திகள்

ஒற்றுமை என்பது தேர்வுக்குரியது அல்ல, அது நாட்டின் தேவை

Share:

கோலாலம்பூர், ஜூன்.02-

தேசிய ஒற்றுமை என்பது இனி ஒரு தேர்வுக்குரியது அல்ல. மாறாக, நாட்டின் நீடித்த தொடர் வளர்ச்சியை உறுதிச் செய்வதற்கு அது, முதன்மை தேவையாகும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தியுள்ளார்.

ஒற்றுமை என்பது ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு அடித்தளம் என்றும், மலேசியாவின் முன்னேற்றத்திற்கு ஓர் உந்தும் சக்தியாகவும் இருக்க வேண்டும் என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.

மக்கள் ஒன்றுபட்டு, ஒற்றுமையாக இருந்தால் மட்டுமே ஒரு வலிமை மிகுந்த நாடாக மலேசியா திகழ முடியும். தேசிய நிலைத்தன்மையும், தேசிய ஒற்றுமையும் அனைத்து முன்னேற்றத்திற்கும் அடிப்படை நிபந்தனைகளில் ஒன்றாகும்.

மாறி வரும் சவால்கள் நிறைந்த உலகில், ஒற்றுமை என்பது ஒரு விருப்பமாக அல்லது ஒரு தேர்வு அல்ல, அது ஒரு தேவையாகும் என்று பிரதமர் வலியுறுத்தினார்.

இன்று இஸ்தானா நெகாராவில் நடைபெற்ற மாமன்னர் சுல்தான் இப்ராஹிமின் அதிகாரப்பூர்வமான பிறந்தநாள் விழாவையொட்டி நடைபெற்ற உயரிய விருதுகள் வழங்கும் நிகழ்வில் பிரதமர் என்ற முறையில் ஆற்றிய உரையில் டத்தோஸ்ரீ அன்வார் இதனை வலியுறுத்தினார்.

Related News

ம.இ.கா-வின் மௌனம் நிராகரிப்புக்குச் சமம் - தக்கியுடின் ஹசான் எச்சரிக்கை

ம.இ.கா-வின் மௌனம் நிராகரிப்புக்குச் சமம் - தக்கியுடின் ஹசான் எச்சரிக்கை

கார்ப்பரேட் மாஃபியா' ஊழல் விவகாரம்: பாரபட்சமற்ற விசாரணைக்கு வான் சைபுல் வலியுறுத்தல்

கார்ப்பரேட் மாஃபியா' ஊழல் விவகாரம்: பாரபட்சமற்ற விசாரணைக்கு வான் சைபுல் வலியுறுத்தல்

9.5 மில்லியன் ரிங்கிட் பணப்பரிமாற்றம்: தொடர்புடைய நபரின் பெயரை  பகிரங்கமாக வெளியிடுக  - பி.கே.ஆர் இளைஞர் அணி அதிரடி கோரிக்கை

9.5 மில்லியன் ரிங்கிட் பணப்பரிமாற்றம்: தொடர்புடைய நபரின் பெயரை பகிரங்கமாக வெளியிடுக - பி.கே.ஆர் இளைஞர் அணி அதிரடி கோரிக்கை

இந்திய முஸ்லிம்  உணவகங்களில் விலை உயர்வு? – விளக்கம் கோரி உரிமையாளர் சங்கத்திற்கு அமைச்சு  அழைப்பு

இந்திய முஸ்லிம் உணவகங்களில் விலை உயர்வு? – விளக்கம் கோரி உரிமையாளர் சங்கத்திற்கு அமைச்சு அழைப்பு

சபா விவகாரம் பிலிப்பைன்ஸின் அரசியல் தந்திரம் - முதலமைச்சர் ஹாஜிஜி நூர் அதிரடி

சபா விவகாரம் பிலிப்பைன்ஸின் அரசியல் தந்திரம் - முதலமைச்சர் ஹாஜிஜி நூர் அதிரடி

மலாக்கா அணைகளில் நீர்மட்டம் சரிவு: கவலைப்படத் தேவையில்லை என மாநில அரசு உறுதி

மலாக்கா அணைகளில் நீர்மட்டம் சரிவு: கவலைப்படத் தேவையில்லை என மாநில அரசு உறுதி