புத்ராஜெயா, ஜூன்.04-
முன்னாள் நிதி அமைச்சர் காலஞ்சென்ற டாயிம் ஸைனுடினின் மனைவி நயிமா அப்துல் காலிட் மற்றும் அவரின் குடும்பத்தினரின் சொத்துக்கள் அகற்றப்படுவதைத் தவிர்க்கவே அந்தச் சொத்துக்களைத் தற்காலிகமாக முடுக்குவதற்கு மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம், நீதிமன்ற உத்தரவைப் பெற்றுள்ளது.
நீதிமன்றத்தில் எஸ்பிஆர்எம் செய்து கொண்ட விண்ணப்பத்தில் நயிமா மற்றும் அவரின் குடும்பத்தினரின் சொத்துக்களைப் பறிக்க வேண்டும் என்பது அல்ல. ஆனால், கேள்விக்குறியாக உள்ள அந்த சொத்து விபரங்கள் தொடர்பான விசாரணைக்கு வழிவிடும் வகையில் அவற்றை முடுக்குவதற்கான உத்தரவை எஸ்பிஆர்எம் பெற்றுள்ளதாக அதன் தலைமை ஆணையர் டான் ஶ்ரீ அஸாம் பாக்கி விளக்கம் அளித்துள்ளார்.








