Mar 28, 2026
Thisaigal NewsYouTube
நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்படவில்லை: விமான நிலையத்திலேயே 279 அந்நிய நாட்டவர்கள் வெளியேற்றப்பட்டனர்
தற்போதைய செய்திகள்

நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்படவில்லை: விமான நிலையத்திலேயே 279 அந்நிய நாட்டவர்கள் வெளியேற்றப்பட்டனர்

Share:

கோலாலம்பூர், ஜூன்.03-

சுற்றுப் பயணிகள் போர்வையில் நாட்டிற்குள் நுழைய முயற்சி செய்ததாக நம்பப்படும் அந்நிய நாட்டைச் சேர்ந்த 279 பேர், விமான நிலையத்திலிருந்து வெளியேற்றப்பட்டனர்.

கேஎல்ஐஏவில் நேற்று தரையிறங்கிய அந்த 279 பேர், குடிநுழைவு முகப்பிடங்களைக் கடந்து செல்வதில் தயக்கம் காட்டிய நிலையில், விமான நிலையத்திற்குள் சுற்றித் திரிந்து கொண்டு இருந்த போது அவர்களின் நடமாட்டம், ரகசிய கேமராவில் கண்டுபிடிக்கப்பட்டது.

அப்பகுதிக்கு விரைந்த எல்லைக் கட்டுப்பாட்டு அமலாக்கத்துறை அதிகாரிகள், வங்காளதேசம், பாகிஸ்தான் மற்றும் இந்தியாவைச் சேர்ந்த அந்த அந்நிய நாட்டவர்களின் பயண ஆவணங்களைச் சோதனையிட்ட போது, அவர்கள் உண்மையிலேயே சுற்றுப் பயணிகள் அல்ல என்பது தெரிய வந்தது.

அவர்கள் நாட்டுக்குள் நுழைவது தடுக்கப்பட்டு, அவர்களின் தாயகத்திற்குத் திரும்பிச் செல்ல உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக எல்லைக் கட்டுப்பாட்டு அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

Related News

ம.இ.கா-வின் மௌனம் நிராகரிப்புக்குச் சமம் - தக்கியுடின் ஹசான் எச்சரிக்கை

ம.இ.கா-வின் மௌனம் நிராகரிப்புக்குச் சமம் - தக்கியுடின் ஹசான் எச்சரிக்கை

கார்ப்பரேட் மாஃபியா' ஊழல் விவகாரம்: பாரபட்சமற்ற விசாரணைக்கு வான் சைபுல் வலியுறுத்தல்

கார்ப்பரேட் மாஃபியா' ஊழல் விவகாரம்: பாரபட்சமற்ற விசாரணைக்கு வான் சைபுல் வலியுறுத்தல்

9.5 மில்லியன் ரிங்கிட் பணப்பரிமாற்றம்: தொடர்புடைய நபரின் பெயரை  பகிரங்கமாக வெளியிடுக  - பி.கே.ஆர் இளைஞர் அணி அதிரடி கோரிக்கை

9.5 மில்லியன் ரிங்கிட் பணப்பரிமாற்றம்: தொடர்புடைய நபரின் பெயரை பகிரங்கமாக வெளியிடுக - பி.கே.ஆர் இளைஞர் அணி அதிரடி கோரிக்கை

இந்திய முஸ்லிம்  உணவகங்களில் விலை உயர்வு? – விளக்கம் கோரி உரிமையாளர் சங்கத்திற்கு அமைச்சு  அழைப்பு

இந்திய முஸ்லிம் உணவகங்களில் விலை உயர்வு? – விளக்கம் கோரி உரிமையாளர் சங்கத்திற்கு அமைச்சு அழைப்பு

சபா விவகாரம் பிலிப்பைன்ஸின் அரசியல் தந்திரம் - முதலமைச்சர் ஹாஜிஜி நூர் அதிரடி

சபா விவகாரம் பிலிப்பைன்ஸின் அரசியல் தந்திரம் - முதலமைச்சர் ஹாஜிஜி நூர் அதிரடி

மலாக்கா அணைகளில் நீர்மட்டம் சரிவு: கவலைப்படத் தேவையில்லை என மாநில அரசு உறுதி

மலாக்கா அணைகளில் நீர்மட்டம் சரிவு: கவலைப்படத் தேவையில்லை என மாநில அரசு உறுதி