ஷா ஆலாம், ஜூன்.09-
லைசென்ஸின்றி, பயணிகளை ஏற்றிச் செல்லும் சேவையில் ஈடுபட்டு இருந்த பாகிஸ்தான் ஆடவர் ஒருவர் கைது செய்யப்பட்டதுடன், அவர் பயன்படுத்திய டொயோட்டா ஹைலக்ஸ் வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.
ஹஜ்ஜுப் பெருநாளை முன்னிட்டு சாலை போக்குவரத்து இலாகாவான ஜேபிஜே மேற்கொண்ட சோதனை நடவடிக்கையில் இன்று காலை 10.45 மணியளவில் ஷா ஆலாம், செக்ஷன் 13 இல் அந்த ஆடவர் பிடிபட்டார்.
30 வயது மதிக்கத்தக்க அந்த பாகிஸ்தான் ஆடவர் பிடிபட்ட போது அவரின் வாகனத்தில் மூன்று பயணிகள் இருந்ததாக ஜேபிஜே சிலாங்கூர் மாநில இயக்குநர் அஸ்ரின் போர்ஹான் தெரிவித்தார்.








