Jul 6, 2026
Thisaigal NewsYouTube
மரத்தில் ஏறிய ஆடவர் மின்சாரம் தாக்கி மரணம்
தற்போதைய செய்திகள்

மரத்தில் ஏறிய ஆடவர் மின்சாரம் தாக்கி மரணம்

Share:

பாப்பார், 08-

சபா, பாபார் பகுதியில் உள்ள கம்போங் பம்பாஙானிஒ மாம்பழம் பறிக்க மரத்தின் மீது ஏறிய ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். 42 வயதான அஹாஜா அப்துல் மூசா என்ற அந்த நபர், மரக்கிளையில் மாம்பழம் பறிக்க இரும்பு கம்பத்தைப் பயன்படுத்தியபோது, அது அருகிலுள்ள மின் கம்பியில் பட்டதாக நம்பப்படுகிறது.
இன்று பிற்பகல் 3:01 மணியளவில் தமது தரப்புக்கு அவசர அழைப்பு வந்ததாகவும், சம்பவ இடத்திற்குச் சென்ற போது அந்த நபர் மரத்தின் மீது மயங்கிய நிலையில் காணப்பட்டதாகவும் பாப்பார் தீயணைப்பு - மீட்பு நிலையத் தலைவர் ரொஸ்லான் ஒஸ்மான் தெரிவித்தார். சபா மின்சார வாரியம் மின்சார விநியோகத்தைத் துண்டித்த பிறகு, தீயணைப்பு வீரர்கள் அவரை கீழே இறக்கினர். ஆனால் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்ததாக சுகாதார அமைச்சின் ஊழியர்கள் உறுதிப்படுத்தினர்.

Related News

பாஸ்  கட்சியின் அரசியல் உத்தரவுகளைப் புறக்கணிக்குமாறு மாட் சாபு அழைப்பு

பாஸ் கட்சியின் அரசியல் உத்தரவுகளைப் புறக்கணிக்குமாறு மாட் சாபு அழைப்பு

15 நிரந்தர பேரிடர் நிவாரண மையங்கள் படிப்படியாக இயங்கத் தொடங்கும்: நாடாளுமன்றத்தில் தகவல்

15 நிரந்தர பேரிடர் நிவாரண மையங்கள் படிப்படியாக இயங்கத் தொடங்கும்: நாடாளுமன்றத்தில் தகவல்

பெர்லிங்-இல் குறைந்த வாக்குப்பதிவு அச்சம்: பக்காத்தான் ஹராப்பான்  வேட்பாளர் கவலை!

பெர்லிங்-இல் குறைந்த வாக்குப்பதிவு அச்சம்: பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் கவலை!

நஜிப்பை விடுவிக்கும் அதிகாரம் மாமன்னருக்கே உரியது; அரசியல் காரணங்கள் இல்லை: அமைச்சர் அஸாலினா

நஜிப்பை விடுவிக்கும் அதிகாரம் மாமன்னருக்கே உரியது; அரசியல் காரணங்கள் இல்லை: அமைச்சர் அஸாலினா

பிஏஎஸ் கட்சிக்கு நியமன சட்டமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்படுகிறதா?: ஜசெக வேட்பாளர் கேள்வி

பிஏஎஸ் கட்சிக்கு நியமன சட்டமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்படுகிறதா?: ஜசெக வேட்பாளர் கேள்வி

புதிதாக வரும் வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்குத் தற்காலிகத் தங்குமிடங்கள்: அமைச்சர் ஆர். ரமணன் தகவல்

புதிதாக வரும் வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்குத் தற்காலிகத் தங்குமிடங்கள்: அமைச்சர் ஆர். ரமணன் தகவல்