Mar 28, 2026
Thisaigal NewsYouTube
சட்டப் போராட்டத்தைத் தொடங்கினார் டாயிமின் துணைவியார்
தற்போதைய செய்திகள்

சட்டப் போராட்டத்தைத் தொடங்கினார் டாயிமின் துணைவியார்

Share:

கோலாலம்பூர், ஜூன்.04-

தமக்கும், தம்முடைய குடும்பத்தினருக்கும் சொந்தமான 750 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள ஆடம்பரச் சொத்துக்களை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம் பறிமுதல் செய்வதற்கு அனுமதி அளித்துள்ள கோலாலம்பூர் உயர் நீதிமன்ற முடிவை எதிர்த்து முன்னாள் நிதி அமைச்சர் காலஞ்சென்ற டாயிம் ஸைனுடினின் துணைவியார் நாயிமா அப்துல் காலிட் தனது சட்டப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளார்.

தாங்கள் கொண்டுள்ள இந்த சொத்துக்கள் யாவும் சட்டப்பூர்வமாகச் சம்பாதிக்கப்பட்டவை என்றும், எக்காரணத்தைக் கொண்டும் அவற்றை விட்டுக் கொடுக்கத் தாம் தயாராக இல்லை என்றும், நாயிமா சூளுரைத்துள்ளார். தங்களின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டது ஓர் அத்துமீறியச் செயலாகும். உயர் நீதிமன்றத்தின் முடிவை எதிர்த்து மேல்முறையீடு செய்யப் போவதாக நாயிமா தெரிவித்துள்ளார்.

நாயிமா மற்றும் அவரின் குடும்பத்திற்குச் சொந்தமான லண்டனில் உள்ள 3 ஆடம்பர பங்களா வீடுகள், இரண்டு வர்ததகக் கட்டிடங்கள் ஆகியவை எஸ்பிஆர்எம்மினால் முடக்கப்பட்ட சொத்துக்களில் அடங்கும் என்று நேற்று அறிவிக்கப்பட்டது.

Related News

ம.இ.கா-வின் மௌனம் நிராகரிப்புக்குச் சமம் - தக்கியுடின் ஹசான் எச்சரிக்கை

ம.இ.கா-வின் மௌனம் நிராகரிப்புக்குச் சமம் - தக்கியுடின் ஹசான் எச்சரிக்கை

கார்ப்பரேட் மாஃபியா' ஊழல் விவகாரம்: பாரபட்சமற்ற விசாரணைக்கு வான் சைபுல் வலியுறுத்தல்

கார்ப்பரேட் மாஃபியா' ஊழல் விவகாரம்: பாரபட்சமற்ற விசாரணைக்கு வான் சைபுல் வலியுறுத்தல்

9.5 மில்லியன் ரிங்கிட் பணப்பரிமாற்றம்: தொடர்புடைய நபரின் பெயரை  பகிரங்கமாக வெளியிடுக  - பி.கே.ஆர் இளைஞர் அணி அதிரடி கோரிக்கை

9.5 மில்லியன் ரிங்கிட் பணப்பரிமாற்றம்: தொடர்புடைய நபரின் பெயரை பகிரங்கமாக வெளியிடுக - பி.கே.ஆர் இளைஞர் அணி அதிரடி கோரிக்கை

இந்திய முஸ்லிம்  உணவகங்களில் விலை உயர்வு? – விளக்கம் கோரி உரிமையாளர் சங்கத்திற்கு அமைச்சு  அழைப்பு

இந்திய முஸ்லிம் உணவகங்களில் விலை உயர்வு? – விளக்கம் கோரி உரிமையாளர் சங்கத்திற்கு அமைச்சு அழைப்பு

சபா விவகாரம் பிலிப்பைன்ஸின் அரசியல் தந்திரம் - முதலமைச்சர் ஹாஜிஜி நூர் அதிரடி

சபா விவகாரம் பிலிப்பைன்ஸின் அரசியல் தந்திரம் - முதலமைச்சர் ஹாஜிஜி நூர் அதிரடி

மலாக்கா அணைகளில் நீர்மட்டம் சரிவு: கவலைப்படத் தேவையில்லை என மாநில அரசு உறுதி

மலாக்கா அணைகளில் நீர்மட்டம் சரிவு: கவலைப்படத் தேவையில்லை என மாநில அரசு உறுதி