கோலாலம்பூர், ஜூன்.04-
கோலாலம்பூர் பங்சாரில் கட்டுமானத் தளத்தில் ஆடவர் ஒருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த நபரின் அடையாளம் இதுவரையில் கண்டுபிடிக்கவில்லை என்று பிரிக்பீல்ட்ஸ் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி கூ மாஷாரிமான் கூ மாஹ்மூட் தெரிவித்தார்.
கடந்த மே 27 ஆம் தேதி பங்சாரில் உள்ள ஐரிஸ் மதுபான விடுதிக்குச் சென்ற 25 வயது பிரிட்டிஸ் பிரஜை மர்மமான முறையில் காணாமல் போனார். அவர் காணாமல் போனது தொடர்பில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வரும் வேளையில் இன்று கட்டுமானத் தளத்தில் ஆடவர் ஒருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
எனினும் அந்த ஆடவரின் சடலம், காணாமல் போன பிரிட்டிஷ் பிரஜையுடையதா? என்பதை உறுதிப்படுத்த இயலவில்லை என்று ஏசிபி கூ மாஷாரிமான் குறிப்பிட்டார்.








