May 21, 2026
Thisaigal NewsYouTube
சுங்கை பூலோ: சிறந்த SPM மாணவர்களுக்கு ஊக்கத்தொகை - டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் வழங்கினார்
தற்போதைய செய்திகள்

சுங்கை பூலோ: சிறந்த SPM மாணவர்களுக்கு ஊக்கத்தொகை - டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் வழங்கினார்

Share:

சுங்கை பூலோ நாடாளுமன்றத் தொகுதியைச் சேர்ந்த 934 சிறந்த SPM மாணவர்கள், தங்களின் கல்விச் சாதனையைப் பாராட்டி வழங்கப்படும் சிறப்பு ஊக்கத்தொகையைப் பெற்றனர். மனிதவள அமைச்சும் எச்ஆர்டி கோர்ப் அமைப்பும் இணைந்து இந்த உன்னத முயற்சியை முன்னெடுத்துள்ளன.

மனிதவள அமைச்சரும் சுங்கை பூலோ நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கோத்தா டாமன்சாராவில் நடைபெற்ற இந்த நிகழ்வில் , 4A முதல் அனைத்து பாடங்களிலும் சிறந்த தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு இந்த ஊக்குவிப்பு நிதி வழங்கப்பட்டது.

இது குறித்து அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் கூறுகையில் , "மாணவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்துவதில் எச்ஆர்டி கோர்ப் வழங்கிய அசைக்க முடியாத ஆதரவு பாராட்டுக்குரியது. நாட்டின் மனித மூலதனத்தை வலுப்படுத்தவும், மாணவர்களின் தன்னம்பிக்கையை அதிகரிக்கவும் இந்தத் திட்டம் ஆண்டுதோறும் தொடர்வதை நான் உறுதி செய்வேன்," எனத் தெரிவித்தார்.

சுங்கை பூலோ சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த இடைநிலைப் பள்ளி மாணவர்கள் இந்த ஊக்கத்தொகையினால் பெருமகிழ்ச்சி அடைந்ததுடன் தங்களுக்கு வழங்கப்பட்ட இந்த ஊக்கத் தொகை குறித்து திசைகளிடம் இவ்வாறு பகிர்ந்து கொண்டனர்.

முன்னதாக எச்ஆர்டி கோர்ப் தலைமை செயல்முறை அதிகாரி டத்தோ முகமது ஷமீர் அப்துல் அஜீஸ் பேசுகையில், இந்த ஊக்கத்தொகை வெறும் நிதி உதவி மட்டுமல்ல, மாணவர்களின் கடின உழைப்பிற்கு அளிக்கப்பட்ட அங்கீகாரம் என்றார்.

சுங்கை பூலோ நாடாளுமன்றத் தொகுதி மக்களின் உள்ளூர் பயணத் தேவைகளை எளிதாக்கும் வகையில், 10,000 இலவச மிதிவண்டிகள் வழங்கப்படும் என்பதையும் டத்தோஸ்ரீ ரமணன் தமது ஊரையில் தெரிவித்தார்.

Related News