Mar 27, 2026
Thisaigal NewsYouTube
டத்தோ ஶ்ரீ முகமட் காலிட் இஸ்மாயில் நாட்டின் புதிய போலீஸ் படைத் தலைவர்
தற்போதைய செய்திகள்

டத்தோ ஶ்ரீ முகமட் காலிட் இஸ்மாயில் நாட்டின் புதிய போலீஸ் படைத் தலைவர்

Share:

கோலாலம்பூர், ஜூன்.20-

அரச மலேசிய போலீஸ் படையின் புதிய தலைவராக டத்தோ ஶ்ரீ முகமட் காலிட் இஸ்மாயில் நியமிக்கப்பட்டுள்ளார். வரும் ஜுன் 22 ஆம் தேதி பணி ஓய்வு பெறும் டான் ஶ்ரீ ரஸாருடின் ஹுசேனுக்குப் பதிலாக அப்பொறுப்புக்கு முகமட் காலிட் இஸ்மாயில் நியமிக்கப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சு அறிவித்துள்ளது.


புதிய ஐஜிபி.யின் பதவிக் காலம், 2025 ஆம் ஆண்டு ஜுன் 23 ஆம் தேதி தொடங்கி, 2027 ஆம் ஆண்டு ஜுன் 22 ஆம் தேதி நிறைவு பெறுகிறது என்ற அறிவிக்கப்பட்டுள்ளது.

60 வயதான முகமட் காலிட் இஸ்மாயில், பணி ஓய்வு பெற்ற நிலையில் மூன்று ஆண்டு கால ஒப்பந்த அடிப்படையில் போலீஸ் படையின் உயரிய பொறுப்புக்கு நியமிக்கப்பட்டுள்ளார். அவரின் நியமனத்திற்கு மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் ஒப்புதல் வழங்கியுள்ளார்.

பேரா, கோல கங்சார், மனோங்கில் பிறந்து வளர்ந்தவரான முகமட் காலிட் இஸ்மாயில், மலேசிய அனைத்துலக இஸ்லாமிய பல்கலைக்கழகத்தில் சட்டத்துறையில் பட்டம் பெற்றவர் ஆவார்.

1986 ஆம் ஆண்டு போலீஸ் படையில் பயிற்சி இன்ஸ்பெக்டராக கோலாலம்பூர் போலீஸ் பயிற்சி மையத்தில் தனது பணியைத் தொடங்கிய முகமட் காலிட் இஸ்மாயில், புக்கிட் அமான் சிறப்புப் பிரிவிலும், கோம்பாக் மாவட்ட போலீஸ் நிலையத்தின் சிறப்புப் பிரிவிலும், புக்கிட் அமான் பயங்கரவாத எதிர்ப்புப் பிரிவிலும், புக்கிட் அமான் பாதுகாப்புப் பிரிவிலும், லண்டனில் மலேசியத் தூதரகத்தில் உயர் போலீஸ் அதிகாரியாகவும் பணியாற்றியுள்ளார்.

தவிர பகாங் மாநில போலீஸ் தலைமையத்தின் சிறப்புப் பிரிவிலும் புக்கிட் அமானில் துணைத் தலைமை இயக்குநராகவும், புக்கிட் அமான் சிறப்புப் பிரிவின் இயக்குநராகவும் முகமட் காலிட் இஸ்மாயில் சேவையாற்றியுள்ளார்.

Related News

வெப்ப அலை: மாணவர் பாதுகாப்பை உறுதி செய்ய கல்வி அமைச்சு அறிவுறுத்தல்

வெப்ப அலை: மாணவர் பாதுகாப்பை உறுதி செய்ய கல்வி அமைச்சு அறிவுறுத்தல்

19 யானைகள் விற்பனை செய்யப்பட்டதாகக் கூறப்படும் தகவல் உண்மையல்ல: பெர்ஹிலிட்டன்  விளக்கம்

19 யானைகள் விற்பனை செய்யப்பட்டதாகக் கூறப்படும் தகவல் உண்மையல்ல: பெர்ஹிலிட்டன் விளக்கம்

ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு: மலேசியா உள்ளிட்ட நட்பு நாடுகளுடன் ஈரான் பேச்சுவார்த்தை

ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு: மலேசியா உள்ளிட்ட நட்பு நாடுகளுடன் ஈரான் பேச்சுவார்த்தை

டீசல் விலை உயர்வு: பினாங்கில் குப்பை சேகரிப்புப் பணிகள் பாதிக்கப்படாது – முதலமைச்சர் சாவ் கோன் இயாவ் உறுதி

டீசல் விலை உயர்வு: பினாங்கில் குப்பை சேகரிப்புப் பணிகள் பாதிக்கப்படாது – முதலமைச்சர் சாவ் கோன் இயாவ் உறுதி

மத்திய கிழக்கு நெருக்கடி: அடுத்த வாரம் அன்வார் சிறப்புச் சந்திப்பு

மத்திய கிழக்கு நெருக்கடி: அடுத்த வாரம் அன்வார் சிறப்புச் சந்திப்பு

வங்சா மாஜுவில்  குடியிருப்புப் பிரதிநிதிகள் மிரட்டி பணம் பறித்ததாகப் புகார்: போலீஸ் விசாரணை

வங்சா மாஜுவில் குடியிருப்புப் பிரதிநிதிகள் மிரட்டி பணம் பறித்ததாகப் புகார்: போலீஸ் விசாரணை