கோலத் திரங்கானு, ஜூன்.05-
கடந்த ஆண்டு திரெங்கானு மலேசிய பல்கலைக்கழகத்தில் சக மாணவனைத் தாக்கி, கடும் காயங்களை விளைவித்ததாக அந்த பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த எட்டு மாணவர்கள் கோலத் திரெங்கானு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டனர்.
21 க்கும் 23 க்கும் இடைப்பட்ட வயதுடைய அந்த எட்டு பல்லைக்கழக மாணவர்களும் மாஜிஸ்திரேட் இஃப்ஃபா நமிஹா இஷாக் முன்னிலையில் நிறுத்தப்பட்டு, குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.
கடந்த ஆண்டு டிசம்பர் 15 ஆம் தேதி அதிகாலை 1.30 மணியளவில் பல்கலைக்கழகத்தின் மாணவர் தங்கும் விடுதியில் நிகழ்ந்த இந்தத் தாக்குதல் சம்பவத்தில் 21 வயது மாணவன் கடும் காயங்களுக்கு ஆளானான்.
குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் கூடியபட்சம் 7 ஆண்டு சிறை மற்றும் அபராதம் விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டத்தின் கீழ் எட்டு மாணவர்களும் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளனர்.








