Jul 6, 2026
Thisaigal NewsYouTube
8 பல்கலைக்கழக மாணவர்கள் மீது குற்றச்சாட்டு
தற்போதைய செய்திகள்

8 பல்கலைக்கழக மாணவர்கள் மீது குற்றச்சாட்டு

Share:

கோலத் திரங்கானு, ஜூன்.05-

கடந்த ஆண்டு திரெங்கானு மலேசிய பல்கலைக்கழகத்தில் சக மாணவனைத் தாக்கி, கடும் காயங்களை விளைவித்ததாக அந்த பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த எட்டு மாணவர்கள் கோலத் திரெங்கானு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டனர்.

21 க்கும் 23 க்கும் இடைப்பட்ட வயதுடைய அந்த எட்டு பல்லைக்கழக மாணவர்களும் மாஜிஸ்திரேட் இஃப்ஃபா நமிஹா இஷாக் முன்னிலையில் நிறுத்தப்பட்டு, குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.

கடந்த ஆண்டு டிசம்பர் 15 ஆம் தேதி அதிகாலை 1.30 மணியளவில் பல்கலைக்கழகத்தின் மாணவர் தங்கும் விடுதியில் நிகழ்ந்த இந்தத் தாக்குதல் சம்பவத்தில் 21 வயது மாணவன் கடும் காயங்களுக்கு ஆளானான்.

குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் கூடியபட்சம் 7 ஆண்டு சிறை மற்றும் அபராதம் விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டத்தின் கீழ் எட்டு மாணவர்களும் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளனர்.

Related News

பாஸ்  கட்சியின் அரசியல் உத்தரவுகளைப் புறக்கணிக்குமாறு மாட் சாபு அழைப்பு

பாஸ் கட்சியின் அரசியல் உத்தரவுகளைப் புறக்கணிக்குமாறு மாட் சாபு அழைப்பு

15 நிரந்தர பேரிடர் நிவாரண மையங்கள் படிப்படியாக இயங்கத் தொடங்கும்: நாடாளுமன்றத்தில் தகவல்

15 நிரந்தர பேரிடர் நிவாரண மையங்கள் படிப்படியாக இயங்கத் தொடங்கும்: நாடாளுமன்றத்தில் தகவல்

பெர்லிங்-இல் குறைந்த வாக்குப்பதிவு அச்சம்: பக்காத்தான் ஹராப்பான்  வேட்பாளர் கவலை!

பெர்லிங்-இல் குறைந்த வாக்குப்பதிவு அச்சம்: பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் கவலை!

நஜிப்பை விடுவிக்கும் அதிகாரம் மாமன்னருக்கே உரியது; அரசியல் காரணங்கள் இல்லை: அமைச்சர் அஸாலினா

நஜிப்பை விடுவிக்கும் அதிகாரம் மாமன்னருக்கே உரியது; அரசியல் காரணங்கள் இல்லை: அமைச்சர் அஸாலினா

பிஏஎஸ் கட்சிக்கு நியமன சட்டமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்படுகிறதா?: ஜசெக வேட்பாளர் கேள்வி

பிஏஎஸ் கட்சிக்கு நியமன சட்டமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்படுகிறதா?: ஜசெக வேட்பாளர் கேள்வி

புதிதாக வரும் வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்குத் தற்காலிகத் தங்குமிடங்கள்: அமைச்சர் ஆர். ரமணன் தகவல்

புதிதாக வரும் வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்குத் தற்காலிகத் தங்குமிடங்கள்: அமைச்சர் ஆர். ரமணன் தகவல்