Mar 28, 2026
Thisaigal NewsYouTube
மகனை ஜாமீனில் எடுக்க தந்தை மறுப்பு
தற்போதைய செய்திகள்

மகனை ஜாமீனில் எடுக்க தந்தை மறுப்பு

Share:

பத்து பாஹாட், ஜூன்.09-

அண்மையில் அறிமுகமான 15 வயது பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்ட தனது 16 வயது மகனை, தந்தை ஒருவர் 1,500 ரிங்கிட் செலுத்தி, ஜாமீனில் எடுக்க மறுத்து விட்டார்.

இது எனது மகனுக்கு ஒரு பாடமாக இருக்க வேண்டும். இது போன்ற ஒழுக்கக்கேடான செயலில் ஈடுபடும் ஒரு மகனை காப்பாற்ற எந்த தந்தையும் முற்படக்கூடாது என்று 40 வயது தந்தை தெரிவித்தார்.

அந்த 16 வயது பையன், ஜோகூர், பத்து பாஹாட் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நீதிபதி அருள் நோவல் தாஸ் முன்னிலையில் நிறுத்தப்பட்டு, குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.

கடந்த ஜுன் 2 ஆம் தேததி பிற்பகல் 4 மணியளவில் பத்து பாஹாட்டில் உள்ள ஒரு வீட்டில் தனக்கு அறிமுகமான பெண்ணை அந்தப் பையன் பாலியல் பலாத்காரம் புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

தனக்கு எதிரான குற்றச்சாட்டை அந்தப் பையன் ஒப்புக் கொண்டான். தீர்ப்பு கூறுவதற்கு ஏதுவாக, அந்தப் பையனை 1,500 ரிங்கிட் ஜாமினில் விடுவிக்க நீதிமன்றம்அனுமதித்தது. எனினும் தனது மகனை ஜாமீனில் எடுக்க விரும்பவில்லை என்று அந்த தந்தை உறுதியாகத் தெரிவித்து விட்டார்.

Related News

ஹார்முஸ் நீரிணையில் சிக்கிய 7 மலேசியக் கப்பல்கள் விரைவில் விடுவிப்பு: அமைச்சர் முகமட் ஹசான் தகவல்

ஹார்முஸ் நீரிணையில் சிக்கிய 7 மலேசியக் கப்பல்கள் விரைவில் விடுவிப்பு: அமைச்சர் முகமட் ஹசான் தகவல்

கிழக்கு மலேசியாவிலும் இலக்கு வைக்கப்பட்ட டீசல் மானியம்: அமைச்சர் அமீசான் முகமது அலி விளக்கம்

கிழக்கு மலேசியாவிலும் இலக்கு வைக்கப்பட்ட டீசல் மானியம்: அமைச்சர் அமீசான் முகமது அலி விளக்கம்

நாட்டில் கடும் வெப்ப அலை: பெர்லிஸ், கெடா, பேராக் மாநிலங்களுக்கு ' நிலை 2' எச்சரிக்கை

நாட்டில் கடும் வெப்ப அலை: பெர்லிஸ், கெடா, பேராக் மாநிலங்களுக்கு ' நிலை 2' எச்சரிக்கை

மலையுச்சியில் மலர்ந்த காதல்: நடிகை பெல்லா அஸ்டில்லா - சையத் சாதிக் கைகோர்த்தனர்

மலையுச்சியில் மலர்ந்த காதல்: நடிகை பெல்லா அஸ்டில்லா - சையத் சாதிக் கைகோர்த்தனர்

அடுப்பு தேவையில்லை... வெயிலே போதும்! கெடாவில் வைரலாகும் 'சூரிய வெப்ப சமையல்

அடுப்பு தேவையில்லை... வெயிலே போதும்! கெடாவில் வைரலாகும் 'சூரிய வெப்ப சமையல்

ஹவுஸ்மென்ஷிப் சேர்க்கை குறைவு: ஒப்பந்த முறையை தொடர்வது குறித்து அரசு முடிவு செய்ய வேண்டும் – டாக்டர் சுப்ரமணியம்

ஹவுஸ்மென்ஷிப் சேர்க்கை குறைவு: ஒப்பந்த முறையை தொடர்வது குறித்து அரசு முடிவு செய்ய வேண்டும் – டாக்டர் சுப்ரமணியம்

மகனை ஜாமீனில் எடுக்க தந்தை மறுப்பு | Thisaigal News