கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி சிப்பாங் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் சரக்கு கிடங்கில் எட்டு பெட்டிகளில் 15 லட்சம் வெள்ளி பெறுமானமுள்ள மின்னியல் மென்பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் ஆறு ஆடவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
21 க்கும் 28 க்கும் இடைப்பட்ட வயதுடைய அந்த ஆறு நபர்களும் கடந்த ஏப்ரல் 26 ஆம் தேதிக்கும் 29 ஆம் தேதிக்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் சுங்கை பேலேக், கே.எல்.ஐ.ஏ, நீலாய் ஆகிய பகுதிகளில் நடத்தப்பட்ட வெவ்வேறு சோதனை நடவடிக்கையில் அந்த அறுவரும் பிடிபட்டனர் என்று சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஹுசேன் ஒமார் கான் தெரிவித்துள்ளார்.
தொலைக்காட்சிப் பெட்டி, கைப்பேசி போன்றவற்றுக்குப் பயன்படுத்தக்கூடிய அந்த மின்னியல் மென்பொருட்கள் தைவானுக்கு ஏற்றுமதி செய்யப்படவிருந்ததாக அவர் குறிப்பிட்டார்.

Related News

கபாஸ் தீவு கடற்கரையில் மிகத் தாழ்வாக பறந்த ஹெலிகாப்டர்: சுற்றுலாப் பயணிகள் அதிர்ச்சி

தெலுக் இந்தானில் போதையில் கார் ஓட்டிய இளைஞரால் விபத்து: இரு இளம் பெண்கள் பலி

குடியுரிமை பெற்றிருப்பது மட்டுமே ஒருவரின் தேசிய அடையாளத்தை நிரூபிக்காது: ஜசெகவின் 'Anak Malaysia' கருத்திற்கு பாஸ் கடும் விமர்சனம்

அரசாங்கம் மாறினால் சிபு பாலத் திட்டம் பாதிக்கப்படும் – சரவாக் முதல்வர் எச்சரிக்கைநான்

அமலாக்க அதிகாரி மீது தாக்குதல்: ஈப்போ மாநகராட்சி கடும் கண்டனம்


