பாங்கி, மே.10-
அரசியல் கட்சிகளுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பான புதிய சட்ட வரைவு குறித்து அம்னோ கட்சி இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்தத் தடையும் தெரிவிக்கவில்லை என சட்ட, நிறுவன சீர்திருத்தத்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ அஸாலினா ஒத்மான் சையிட் தெரிவித்துள்ளார். இச்சட்டம் நடப்புக்கு வருவதற்கு முன்னதாக அனைத்து அரசியல் கட்சிகளின் முறையான கருத்துக்களும் ஆலோசனைகளும் பெறப்பட வேண்டியது அவசியம் என அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
பொது நிதியைப் பயன்படுத்துதல், நன்கொடைகளுக்கான உச்சவரம்பு போன்ற முக்கிய அம்சங்கள் இன்னும் ஆய்வில் இருப்பதால், முழுமையான உடன்பாடு எட்டப்பட்ட பின்னரே இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.








