மலேசியாவில் டிவெட் எனப்படும் தொழில்திறன் பயிற்சிக் கல்வி என்பது வெறும் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதாக மட்டும் இருக்கக்கூடாது, மாறாக தொழிலாளர்களுக்கு உயர்தரமான, அதிக உற்பத்தித்திறன் கொண்ட, சிறந்த ஊதியம் வழங்கும் பணிகளை உறுதி செய்ய வேண்டும் என்று தலைமைச் செயலாளர் தான் ஸ்ரீ ஷம்சுல் அஸ்ரி அபு பக்கர் வலியுறுத்தியுள்ளார்.
தொழில்துறைத் தேவைகளுக்கும் மாணவர்களின் திறன்களுக்கும் இடையிலான இடைவெளியைக் குறைப்பதிலும், பட்டதாரிகளின் வேலைவாய்ப்புத் திறனை மேம்படுத்துவதிலும் டிவெட் மிக முக்கியப் பங்கு வகிக்கிறது என்று அவர் குறிப்பிட்டார். டிஜிட்டல், உயர்தொழில்நுட்பப் பொருளாதாரம் ஆகியவற்றை நோக்கி நாட்டை உருமாற்றுவதற்கும், மனிதவள மேம்பாட்டுத் திட்டங்களை வலுப்படுத்துவதற்கும் டிவெட் ஒரு பொருளாதார உந்துசக்தியாகச் செயல்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.








